Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க காதலியை கொல்லாம விட மாட்டேன்: வாரிசு நடிகர் வீட்டு வாசலில் ரசிகை மிரட்டல்
மும்பை: பாலிவுட் நடிகர் வருண் தவானின் காதலியை கொலை செய்யப் போவதாக ரசிகை ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலிவுட் நடிகர் வருண் தவான் நடாஷா தலால் என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இருவரும் ஜோடியாக பட விழாக்களுக்கு வருவதும், வெளிநாட்டிற்கு செல்வதுமாக உள்ளனர்.
இந்நிலையில் ரசிகை ஒருவர் வருணின் வீட்டுற்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என்று காவலாளியிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு ட்வீட் போட்ட காஜல்: விளாசிய நெட்டிசன்ஸ், பாராட்டிய சவ்கிதார்கள்
வருண் தவான்
வருண் கலன்க் பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருப்பதால் அவரை சந்திக்க முடியாது என்று காவலாளிகள் அந்த ரசிகையிடம் கூறியுள்ளனர். இதை கேட்ட அந்த ரசிகை கடுப்பாகி கூச்சலிட ஆரம்பித்துள்ளார். நான் நடாஷாவை கொலை செய்யப் போகிறேன் என்று கத்தியுள்ளார். அவரை அடக்க முடியாததால் காவலாளிகள் வேறு வழியில்லாமல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
புகார்
வருண் தவான் வீட்டு காவலாளிகள் மும்பை சான்டா க்ரூஸ் பகுதி காவல் நிலையத்தில் அந்த ரசிகை மீது புகார் அளித்துள்ளனர். வருண் தவானிடம் வாக்குமூலம் வாங்கிய பிறகு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுமாம்.
நோட்டம்
ரசிகை ஒருவர் வருண் சார் வீட்டை வெகுநேரமாக சுற்றி சுற்றி வந்தார். இது வழக்கமான ஒன்று தான் என்பதால் நாங்கள் முதலில் கண்டுகொள்ளவில்லை. ரசிகர்கள் தங்கள் எல்லையை தாண்டி இதுவரை நடந்து கொண்டது இல்லை. ரசிகர்கள் வீட்டு வாசலில் கூடி செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் வருண் சார் சிரித்த முகத்துடன் போஸ் கொடுப்பார் என்கிறார்கள் காவலாளிகள்.
மிரட்டல்
தற்போது வருண் சார் பிசியாக இருப்பதால் அந்த ரசிகையை சந்திக்கவில்லை. ஆனால் அந்த பெண் திரும்பிச் செல்ல மறுத்து பிரச்சனை செய்தார். தன்னை தான் காயப்படுத்திக் கொள்வேன் என்று மிரட்டிய ரசிகை பின்னர் நடாஷா மேடத்தை கொலை செய்வேன் என்றார் என காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.