நான் சரத்குமார் ஜோடி, ஆனால் இனி நடிக்க மாட்டேன்: வாரிசு நடிகரின் வருங்கால மனைவி
சென்னை: திருமணத்திற்கு பிறகு நடிக்கப் போவது இல்லை என்று திவ்யா தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் தயாரிப்பாளர், நடிகராக வலம் வருபவர் ஆர்.கே. சுரேஷ். அவருக்கும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் திவ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதை ஆர்.கே. சுரேஷே அறிவித்தார்.

சரத்குமார்
சரத்குமார் நடித்து வரும் அடங்காதே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் திவ்யா. கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் சினிமா பயணத்தை முடித்துக் கொள்கிறார் அவர்.

சொந்த ஊர்
எங்களுடையது பெரியவர்களாக பார்த்து நிச்சயம் செய்த திருமணம். என் வருங்கால கணவரின் சொந்த ஊருக்கு அருகில் தான் என் ஊரும் உள்ளது என்று திவ்யா தெரிவித்தார்.

கல்யாணம்
திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன். எங்கள் கல்யாணம் காதல் கல்யாணம் அல்ல என்று திவ்யா தெளிவாகக் கூறியிருக்கிறார். இது காதல் கல்யாணம் இல்லை என்று சுரேஷும் தெரிவித்திருக்கிறார்.

சுரேஷ்
சுமங்கலி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் திவ்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.கே. சுரேஷ் தற்போது 3 படங்களில் வில்லனாகவும், 3 படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











