தனி ஒருவனை நேசித்தேன் - ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய சூர்யா
சென்னை: சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் தனி ஒருவன் திரைப்படத்தை தான் மிகவும் நேசித்ததாக நடிகர் சூர்யா ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தின் வெற்றியில் இருந்து என்ன தெரிகிறதென்றால் மொத்த படக்குழுவினரும் தங்கள் உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர். அதனால் தான் இந்த மாபெரும் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.
மொத்தத்தில் சூப்பரான ஒரு திரைப்படமாக தனி ஒருவன் வந்திருக்கிறது இப்படி ஒரு சிறந்த திரைப்படத்தைக் கொடுத்த, தனி ஒருவன் குழுவினருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனந்திறந்து பாராட்டியிருக்கிறார் சூர்யா.
சூர்யாவின் இந்த பாராட்டால் தனி ஒருவன் படக்குழுவினர் மிகவும் மகிழ்ந்து போயிருக்கின்றனர், குறிப்பாக படத்தின் வசனகர்த்தா சுபா மற்றும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் தங்கள் நன்றிகளை சூர்யாவிற்கு தெரிவித்து இருக்கின்றனர்.
தனி ஒருவன் - வசூல், பாராட்டு இரண்டிலுமே நம்பர் 1 தான்..


Click it and Unblock the Notifications











