Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரஜினி, அஜித்துக்கு அப்புறம் சிவா தான்... சொல்வது அனிருத்!
நடிகர் சிவாவின் படத்தை தியேட்டருக்கு சென்று முதல் நாள் பார்ப்பேன் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ரஜினி, அஜித்துக்கு பிறகு சிவா படத்தை தான் தியேட்டருக்கு சென்று முதல் நாள் பார்ப்பேன் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார்.
வெங்கட்பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னை நேற்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் மிர்ச்சி சிவா, தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, " இந்த படத்துக்கு இசையமைத்துள்ள இசை சுனாமி பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள். படத்தின் ஹீரோ வைபவின் தீவிர ரசிகன் நான். மேயாதமான் படத்தை 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். அந்தளவுக்கு அவர் சிறப்பாக நடித்துள்ளார்.
ரஜினி, அஜித் படங்களுக்கு பிறகு சிவாவின் படத்தைதான் முதல் நாள் அன்றே தியேட்டருக்கு சென்று பார்ப்பேன். அதன் பிறகு அவரை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டுவேன்.
ரஜினி, அஜித் படங்களுக்கு பிறகு சிவாவின் படத்தைதான் முதல் நாள் அன்றே தியேட்டருக்கு சென்று பார்ப்பேன். அதன் பிறகு அவரை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டுவேன்.
அதேபோல வெங்கட்பிரபுவுக்கு நான் பெரிய ரசிகன். சென்னை 28 படம் வந்தபோ
து நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். தியேட்டருக்கு சென்று நண்பர்களுடன் படம் பார்த்து என்ஜாய் செய்தேன்.
வெங்கட்பிரபு டீம் போல நாமும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என எனது நண்பர்களிடமும் அவ்வப்போது கூறுவேன்".
இவ்வாறு அவர் பேசினார்.