பாகுபலி பற்றிய என் கணிப்பு தவறானதில் மிக்க மகிழ்ச்சி: இசையமைப்பாளர்
லண்டன்: என் கணிப்பு தவறாகப் போனதில் மகிழ்ச்சியாக உள்ளது என இசையமைப்பாளர் கீரவாணி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கீரவாணி கூறியதாவது,

ராஜமவுலி
ராஜமவுலி என்னிடம் பாகுபலி கதையை சொல்லிவிட்டு படத்தை ஒரு பகுதியாக எடுக்கலாமா அல்லது இரண்டு பகுதியாக எடுக்கலாமா என அறிவுரை கேட்டார்.

பாகுபலி
மெகா பட்ஜெட், ஏகப்பட்ட கலைஞர்கள், தொழில்நுட்ப நபர்களை ஈடுபடுத்துவதால் இரண்டு பாகமாக எடுக்க வேண்டாம் என்று நான் ராஜமவுலியிடம் தெரிவித்தேன்.

பாகுபலி 2
நான் சொன்னபடி செய்ய முடியவில்லை. பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியானது. இரண்டு பாகங்களாக படம் வெளியானதில் மகிழ்ச்சியாக உள்ளது.

மகிழ்ச்சி
என் கணிப்பு தவறானதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். தவறாகப் போகவில்லை அது நடக்கவில்லை. இரண்டு பாகங்களாக எடுத்ததால் தான் பாகுபலி இத்தகைய சாதனை படைத்துள்ளது என்றார் கீரவாணி.


Click it and Unblock the Notifications











