Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
திருமணமாகி, கர்ப்பமாக இருக்கிறேனா?: நடிகை இலியானா விளக்கம்
ஹைதராபாத்: தனக்கு திருமணமாகி, கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை இலியானா விளக்கம் அளித்துள்ளார்.
டோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலான இலியானா அமர் அக்பர் அந்தோணி படம் மூலம் மீண்டும் டோலிவுட்டுக்கு வந்துள்ளார்.
அவர் பாலிவுட்டில் செட்டிலான நேரத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனுடன் திருமணமாகி அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து இலியானா கூறியிருப்பதாவது,
பாலிவுட்
என் கெரியரை பொருத்தவரை மக்கள் அவர்களாக ஏதாவது நினைத்துக் கொள்கிறார்கள். நான் பர்ஃபி படத்தில் நடிக்க ஒப்பந்தமானவுடன் டோலிவுட்டை விட்டே செல்கிறேன் என்று வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளித்தது. அது ஆதாரமற்றவை. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனக்கு அடையாளம் கொடுத்த டோலிவுட்டை நான் எப்படி விடுவேன்?
நல்ல படம்
நான் ஜுலாயி படத்தில் நடித்தபோது பர்ஃபி இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் கதை சுவாரஸ்யமாக இருந்ததால் அதை மிஸ் பண்ண விரும்பவில்லை. அந்த படத்தை ஒப்புக் கொள்ளும் முன்பு நான் தெலுங்கு பட இயக்குனர் திரிவிக்ரமிடம் கூறினேன். என் கதாபாத்திரம் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பே அந்த படத்தை ஒப்புக் கொள்ளுமாறு என்னை வற்புறுத்தியவர் அவர் தான்.
டோலிவுட்
எனக்கு பாலிவுட்டில் சில நல்ல படங்கள் கிடைத்ததால் தெலுங்கு படங்களில் நடிக்க நேரம் இல்லை. ஒரு சமயத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுமாறு டோலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வந்தது. அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் சரியான பட வாய்ப்புக்காக காத்திருந்தேன். அப்பொழுது தான் அமர் அக்பர் அந்தோணி பட வாய்ப்பு கிடைத்தது.
கர்ப்பம்
பல காலம் நினைவில் இருக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். 20 வயதில் நடிக்க வந்தேன். தற்போது எனக்கு 32 வயதாகிறது. எனக்கு திருமணமும் ஆகவில்லை. நான் கர்ப்பமாகவும் இல்லை. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிறகு நான் மனதளவில் வலுவாகிவிட்டேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச விரும்பவில்லை என்கிறார் இலியானா.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!