Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அம்மாவுக்கு கேன்சர்னு அழுதபோது அப்படி வந்து கேட்கலாமா?: நித்யா மேனன்
Recommended Video
சென்னை: தயாரிப்பாளர்களை அவமதித்த புகார் குறித்து நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
மலையாள தயாரிப்பாளர்கள் சிலரை நித்யா மேனன் அவமதித்ததாக முன்பு புகார் எழுந்தது. இதையடுத்து நித்யா மேனன் திமிர் பிடித்தவர் என்று மல்லுவுட்டில் பேசினார்கள். அவர் மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.
நித்யா அண்மையில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தடை பற்றி அவர் கூறியதாவது,
காலங்காத்தால சாந்தனுவை மெர்சல் ஆக்கிய விஜய்
அம்மா
நான் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் தள்சமயம் ஒரு பெண் குட்டி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அதுவும் 3வது ஸ்டேஜில் இருந்தது. எனக்கு அப்பொழுது மைக்ரேன் பிரச்சனை உச்சத்தில் இருந்தது.
அழுகை
தள்சமயம் ஒரு பெண்குட்டி படத்தில் நடித்தபோது பிரேக்குகளில் அறைக்குள் சென்று அம்மாவை நினைத்து அழுவேன். நான் மைக்ரேனால் அவஸ்தை பட்டதுடன் என் அம்மாவை நினைத்து அழுது கொண்டிருந்தபோது அபாயின்மென்ட் இல்லாமல் சில தயாரிப்பாளர்கள் என்னை பார்க்க வந்தனர். அவர்கள் யார் என்று கூட எனக்குத் தெரியாது.
படம்
எனக்கு உடல்நலம் சரியில்லாததாலும், படப்பிடிப்பு இருந்ததாலும் பின்னர் பேசலாம் என்று அந்த தயாரிப்பாளர்களிடம் தெரிவித்தேன். இது அவர்களின் ஈகோவை தொட்டுவிட்டது. நான் அவர்களுடன் பேசாததால் நான் திமிர் பிடித்தவள் என்று அந்த தயாரிப்பாளர்கள் வெளியே சொல்லிவிட்டனர்.
தயாரிப்பாளர்கள்
எனக்கு இல்லை அவர்களுக்கு தான் ஈகோ பிரச்சனை. அந்த சம்பவத்தை நினைத்து கவலைப்பட்டது உண்டு. அதன் பிறகு இதற்கெல்லாம் கவலை பட்டால் வேலைக்கு ஆகாது என்று படங்களில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டேன் என்கிறார் நித்யா.