Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
சிரஞ்சீவி மருமகனை காதலிக்கிறேனா?: ரெஜினா விளக்கம்
சென்னை: தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜுடன் காதல் என்று கிளம்பிய பேச்சு குறித்து நடிகை ரெஜினா கசான்ட்ரா விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரியின் மகன் சாய் தரம் தேஜ் ஹீரோவாக அறிமுகமான பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் ரெஜினா கசான்ட்ரா அவருக்கு ஜோடியாக நடித்தார்.
அதில் இருந்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக பேசப்படுகிறது.
ரஜினியின் நிம்மதியை கெடுக்கும் எஸ்.ஜே. சூர்யா?
காதல்
கடந்த சில நாட்களாக எனக்கும், சக நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளில் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவை ஆதாரமற்ற வதந்தி என்று தெரிவித்துள்ளார் ரெஜினா.
படம்
என் வாழ்வில் தற்போது உள்ள ஒரே காதல் என் வேலை தான். அதை தவிர வேறு எந்த காதலும் இல்லை. நான் காதலித்தால் நானே உங்களிடம் தெரிவிப்பேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி என்று ரெஜினா கூறியுள்ளார்.
நண்பர்கள்
நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று முன்பு கூறி வந்தனர் ரெஜினாவும், சாய் தரம் தேஜும். கடந்த 2017ம் ஆண்டு அவர்களின் காதல் பற்றி அடிக்கடி பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இருவருமே மறுத்துள்ளனர்.
காதல் முறிவு
ரெஜினாவுக்கும், சாய் தரம் தேஜுக்கும் இடையே பிரச்சனை என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. அதனால் தான் தங்களுக்கு இடையே காதல் எல்லாம் இல்லை என்று இருவரும் மாறி மாறி விளக்கம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.