Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சிரஞ்சீவி மருமகனை காதலிக்கிறேனா?: ரெஜினா விளக்கம்
சென்னை: தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜுடன் காதல் என்று கிளம்பிய பேச்சு குறித்து நடிகை ரெஜினா கசான்ட்ரா விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரியின் மகன் சாய் தரம் தேஜ் ஹீரோவாக அறிமுகமான பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் ரெஜினா கசான்ட்ரா அவருக்கு ஜோடியாக நடித்தார்.
அதில் இருந்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக பேசப்படுகிறது.
ரஜினியின் நிம்மதியை கெடுக்கும் எஸ்.ஜே. சூர்யா?
காதல்
கடந்த சில நாட்களாக எனக்கும், சக நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளில் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவை ஆதாரமற்ற வதந்தி என்று தெரிவித்துள்ளார் ரெஜினா.
படம்
என் வாழ்வில் தற்போது உள்ள ஒரே காதல் என் வேலை தான். அதை தவிர வேறு எந்த காதலும் இல்லை. நான் காதலித்தால் நானே உங்களிடம் தெரிவிப்பேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி என்று ரெஜினா கூறியுள்ளார்.
நண்பர்கள்
நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று முன்பு கூறி வந்தனர் ரெஜினாவும், சாய் தரம் தேஜும். கடந்த 2017ம் ஆண்டு அவர்களின் காதல் பற்றி அடிக்கடி பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இருவருமே மறுத்துள்ளனர்.
காதல் முறிவு
ரெஜினாவுக்கும், சாய் தரம் தேஜுக்கும் இடையே பிரச்சனை என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. அதனால் தான் தங்களுக்கு இடையே காதல் எல்லாம் இல்லை என்று இருவரும் மாறி மாறி விளக்கம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.