Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
லட்சுமி ராமகிருஷ்ணனை சும்மா விடமாட்டேன்.. இனி பஞ்சாயத்தே பண்ணக் கூடாது.. நடிகை வனிதா கிர்ர்ர்!
சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணனை சும்மா விட மாட்டேன் என்று நடிகை வனிதா கூறியுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.
முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.
100 நாள் வேலை வாய்ப்புக்கு குறைகிறதா மவுசு... காரணம் என்ன?
சூரியா தேவி
இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் நடிகை வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். வனிதாவின் திருமணம் குறித்து சூரியாதேவி என்பவரும் நடிகை கஸ்தூரி, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
நீ என்ன பத்தினியா?
அவர்களை கடுமையாகச் சாடி, சமூக வலைதளப் பக்கத்தில் பதில் அளித்திருந்தார் வனிதா. இது பரபரப்பானது. இந்த விவகாரம் தொடர்பாக, மீடியா ஒன்று நடிகை வனிதாவையும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் நேரலையில் பேச வைத்தது. இதில் பேசிய நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை அநாகரிகமாகப் பேசினார். ஒரு கட்டத்தில், வாடி போடி என்று அழைக்கத் தொடங்கிய வனிதா, நீ என்ன பத்தினியா? ஒரு புருஷன் இருந்தா, நீ ஒழுங்கா?' என்று ஆவேசமானார்.
தரக்குறைவாக
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 'நூறு கணவர் வேண்டுமானாலும் இருக்கட்டும். கவலையில்லை. ஆனால், வெறொரு பெண்ணின் கணவராக இருக்கக் கூடாது' என்று கூறியிருந்தார். இவருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரியும் பேசியிருந்தார். இதனால் நடிகை வனிதா, கஸ்தூரியையும் விளாசினார். முட்டாள், காமெடி பீஸ் என தரக்குறைவாக விளாசிய வனிதா, அவரை பிளாக் செய்துவிட்டதாக அறிவித்தார்.
வக்கீல் நோட்டீஸ்
இதையடுத்து தன்னைப் பற்றி அநாகரிகமாக பேசியதற்காக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். அதனால் தனது நஷ்ட ஈடாக ரூ. 1.25 கோடி தரவேண்டும் என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வனிதாவும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
சும்மா விடமாட்டேன்
இடையில் சில நாட்கள் சோசியல் மீடியாவில் அமைதியாக இருந்த இந்த பிரச்னை, இப்போது மீண்டும் வெடித்துள்ளது. ஒரு நெட்டிசன் லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி சொன்னதற்கு நடிகை வனிதா காட்டமாகப் பதிலளித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனை நான் சும்மா விடமாட்டேன். இனி அவர் எந்த பஞ்சாயத்து நிகழ்ச்சிகளையும் மீண்டும் நடத்தக் கூடாது என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.
அவர்கள் காமெடியர்கள்
இன்னொருவர் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜய் ஆகியோரின் விளையாட்டு முடிந்தது என்று கூறியுள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள நடிகை வனிதா, அது விளையாட்டு இல்லை. அவர்கள் காமெடியர்கள் என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இதற்கு கஸ்தூரியோ, லட்சுமி ராமகிருஷ்ணனோ இன்னும் பதில் சொல்லவில்லை.