Don't Miss!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
லட்சுமி ராமகிருஷ்ணனை சும்மா விடமாட்டேன்.. இனி பஞ்சாயத்தே பண்ணக் கூடாது.. நடிகை வனிதா கிர்ர்ர்!
சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணனை சும்மா விட மாட்டேன் என்று நடிகை வனிதா கூறியுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.
முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.
100 நாள் வேலை வாய்ப்புக்கு குறைகிறதா மவுசு... காரணம் என்ன?
சூரியா தேவி
இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் நடிகை வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். வனிதாவின் திருமணம் குறித்து சூரியாதேவி என்பவரும் நடிகை கஸ்தூரி, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
நீ என்ன பத்தினியா?
அவர்களை கடுமையாகச் சாடி, சமூக வலைதளப் பக்கத்தில் பதில் அளித்திருந்தார் வனிதா. இது பரபரப்பானது. இந்த விவகாரம் தொடர்பாக, மீடியா ஒன்று நடிகை வனிதாவையும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் நேரலையில் பேச வைத்தது. இதில் பேசிய நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை அநாகரிகமாகப் பேசினார். ஒரு கட்டத்தில், வாடி போடி என்று அழைக்கத் தொடங்கிய வனிதா, நீ என்ன பத்தினியா? ஒரு புருஷன் இருந்தா, நீ ஒழுங்கா?' என்று ஆவேசமானார்.
தரக்குறைவாக
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 'நூறு கணவர் வேண்டுமானாலும் இருக்கட்டும். கவலையில்லை. ஆனால், வெறொரு பெண்ணின் கணவராக இருக்கக் கூடாது' என்று கூறியிருந்தார். இவருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரியும் பேசியிருந்தார். இதனால் நடிகை வனிதா, கஸ்தூரியையும் விளாசினார். முட்டாள், காமெடி பீஸ் என தரக்குறைவாக விளாசிய வனிதா, அவரை பிளாக் செய்துவிட்டதாக அறிவித்தார்.
வக்கீல் நோட்டீஸ்
இதையடுத்து தன்னைப் பற்றி அநாகரிகமாக பேசியதற்காக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். அதனால் தனது நஷ்ட ஈடாக ரூ. 1.25 கோடி தரவேண்டும் என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வனிதாவும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
சும்மா விடமாட்டேன்
இடையில் சில நாட்கள் சோசியல் மீடியாவில் அமைதியாக இருந்த இந்த பிரச்னை, இப்போது மீண்டும் வெடித்துள்ளது. ஒரு நெட்டிசன் லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி சொன்னதற்கு நடிகை வனிதா காட்டமாகப் பதிலளித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனை நான் சும்மா விடமாட்டேன். இனி அவர் எந்த பஞ்சாயத்து நிகழ்ச்சிகளையும் மீண்டும் நடத்தக் கூடாது என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.
அவர்கள் காமெடியர்கள்
இன்னொருவர் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜய் ஆகியோரின் விளையாட்டு முடிந்தது என்று கூறியுள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள நடிகை வனிதா, அது விளையாட்டு இல்லை. அவர்கள் காமெடியர்கள் என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இதற்கு கஸ்தூரியோ, லட்சுமி ராமகிருஷ்ணனோ இன்னும் பதில் சொல்லவில்லை.