Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே: விஷால் தம்பி கோபம்
பெங்களூர்:
கே.ஜி.எஃப். படம் புகழ் யஷ் கவலையும், கோபமும் படும்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கே.ஜி.எஃப். படம் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்டார் கன்னட நடிகர் யஷ். கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் யஷை கொலை செய்ய ரவுடிகள் திட்டமிட்டதாக தகவல் தீயாக பரவியது.
எங்கப்பா டி.ஜி.பி. ஆகிட்டாரு: விஷ்ணு விஷால் ஹேப்பி
யஷ்
கன்னட திரையுலகை சேர்ந்த ஸ்டார் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்ட ஒரு குழுவை சேர்ந்த 4 பேரை பெங்களூர் போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். அந்த ஸ்டார் யஷ் என்று ஒரு தகவல் பரவியது. சிலரோ கன்னட திரையுலகை சேர்ந்த ஒருவர் தான் யஷை கொலை செய்ய ரவுடிகளை அனுப்பியதாக பேசத் துவங்கிவிட்டனர்.
நடிகர்
யஷை கொலை செய்யத் திட்டமிட்டதாக தகவல் பரவியதை அடுத்து பலரும் அவருக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளனர். யஷின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அவரது குடும்பத்தார், நண்பர்கள், ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் யஷ் மீடியாவை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
போலீஸ்
நான் கூடுதல் கமிஷனர் அலோக் குமார் மற்றும் உள்துறை அமைச்சர் பாட்டில் ஆகியோரிடம் பேசினேன். நான் ரவுடிகளின் ஹிட் லிஸ்ட்டில் இல்லை என்று அவர்கள் எனக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்கள் என்கிறார் யஷ்.
ரவுடி
ஒவ்வொரு முறையும் ஒரு ரவுடி கைதாகும்போது என் உயிருக்கு ஆபத்து என்ற வதந்தி பரவுகிறது. நான் ஒன்றும் ஆடு இல்லை எளிதில் வெட்ட. என் பலம் எனக்கு தெரியும். இந்த வதந்திகளால் ஏதாவது நடக்குமோ என்று கவலையாக உள்ளது. மீடியாவுக்கு தவறான தகவல் அளிப்பது யார் என்று வியக்கிறேன். ரவுடி கைதாகும்போது எல்லாம் என் உயிருக்கு ஆபத்து என்ற வதந்தியை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் யஷ். யஷின் கே.ஜி.எஃப்.(தமிழ்) படத்தை தமிழகத்தில் வெளியிட்ட விஷால் அவரை தனது தம்பியாக பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.