Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நான் சரிபட்டு வர மாட்டேன்னு சொல்லிவிட்டு அட்ஜஸ்ட் செய்த நடிகை
சென்னை: அடங்காதே பட இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி போன் செய்து அழைத்தபோது நான் சரிபட்டு வர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் மந்திரா பேடி.
பாலிவுட் நடிகையான மந்திரா பேடி சிம்புவின் மன்மதன் படம் மூலம் கோலிவுட் வந்தார். அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து தற்போது அடங்காதே படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி கூறியதாவது,
போலீஸ்
என் படத்தில் விஜயசாந்தியை தான் போலீஸ் அதிகாரியாக நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் அரசியலில் படுபிசியாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. விஜயசாந்தி நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
மந்திரா
வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது தான் மந்திரா பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தேன். அந்த புகைப்படத்தில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து ஃபிட்டாக இருப்பது தெரிந்தது. உடனே அவரை தொடர்பு கொண்டபோது அவர் அடங்காதே படத்தில் நடிக்க விருப்பமாக இல்லை.
ஸ்க்ரிப்ட்
நான் தென்னிந்திய படங்களுக்கு சரிபட்டு வர மாட்டேன். அதனால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்றார். நான் ஸ்க்ரிப்ட் அனுப்பி வைக்கிறேன். படித்துப் பாருங்கள், அப்படியும் பிடிக்காவிட்டால் சொல்லுங்கள் என்றேன். ஸ்க்ரிப்ட்டை படித்ததும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் மந்திரா. நானே எனக்கு டப்பிங் பேசுகிறேன் என்று கூறினார். மேலும் சம்பள விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்தார் என்றார் ஷண்முகம்.
சம்பளம்
பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படங்களில் நடிக்க வரும் போது கூடுதல் சம்பளம் கேட்டு அடம்பிடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மந்திரா சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள அடங்காதே படத்தில் சரத்குமாரும் உள்ளார். சுரபி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.