Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
நான் சரிபட்டு வர மாட்டேன்னு சொல்லிவிட்டு அட்ஜஸ்ட் செய்த நடிகை
சென்னை: அடங்காதே பட இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி போன் செய்து அழைத்தபோது நான் சரிபட்டு வர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் மந்திரா பேடி.
பாலிவுட் நடிகையான மந்திரா பேடி சிம்புவின் மன்மதன் படம் மூலம் கோலிவுட் வந்தார். அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து தற்போது அடங்காதே படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி கூறியதாவது,
போலீஸ்
என் படத்தில் விஜயசாந்தியை தான் போலீஸ் அதிகாரியாக நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் அரசியலில் படுபிசியாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. விஜயசாந்தி நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
மந்திரா
வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது தான் மந்திரா பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தேன். அந்த புகைப்படத்தில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து ஃபிட்டாக இருப்பது தெரிந்தது. உடனே அவரை தொடர்பு கொண்டபோது அவர் அடங்காதே படத்தில் நடிக்க விருப்பமாக இல்லை.
ஸ்க்ரிப்ட்
நான் தென்னிந்திய படங்களுக்கு சரிபட்டு வர மாட்டேன். அதனால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்றார். நான் ஸ்க்ரிப்ட் அனுப்பி வைக்கிறேன். படித்துப் பாருங்கள், அப்படியும் பிடிக்காவிட்டால் சொல்லுங்கள் என்றேன். ஸ்க்ரிப்ட்டை படித்ததும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் மந்திரா. நானே எனக்கு டப்பிங் பேசுகிறேன் என்று கூறினார். மேலும் சம்பள விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்தார் என்றார் ஷண்முகம்.
சம்பளம்
பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படங்களில் நடிக்க வரும் போது கூடுதல் சம்பளம் கேட்டு அடம்பிடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மந்திரா சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள அடங்காதே படத்தில் சரத்குமாரும் உள்ளார். சுரபி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.