Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் சரிபட்டு வர மாட்டேன்னு சொல்லிவிட்டு அட்ஜஸ்ட் செய்த நடிகை
சென்னை: அடங்காதே பட இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி போன் செய்து அழைத்தபோது நான் சரிபட்டு வர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் மந்திரா பேடி.
பாலிவுட் நடிகையான மந்திரா பேடி சிம்புவின் மன்மதன் படம் மூலம் கோலிவுட் வந்தார். அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து தற்போது அடங்காதே படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி கூறியதாவது,
போலீஸ்
என் படத்தில் விஜயசாந்தியை தான் போலீஸ் அதிகாரியாக நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் அரசியலில் படுபிசியாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. விஜயசாந்தி நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
மந்திரா
வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது தான் மந்திரா பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தேன். அந்த புகைப்படத்தில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து ஃபிட்டாக இருப்பது தெரிந்தது. உடனே அவரை தொடர்பு கொண்டபோது அவர் அடங்காதே படத்தில் நடிக்க விருப்பமாக இல்லை.
ஸ்க்ரிப்ட்
நான் தென்னிந்திய படங்களுக்கு சரிபட்டு வர மாட்டேன். அதனால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்றார். நான் ஸ்க்ரிப்ட் அனுப்பி வைக்கிறேன். படித்துப் பாருங்கள், அப்படியும் பிடிக்காவிட்டால் சொல்லுங்கள் என்றேன். ஸ்க்ரிப்ட்டை படித்ததும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் மந்திரா. நானே எனக்கு டப்பிங் பேசுகிறேன் என்று கூறினார். மேலும் சம்பள விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்தார் என்றார் ஷண்முகம்.
சம்பளம்
பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படங்களில் நடிக்க வரும் போது கூடுதல் சம்பளம் கேட்டு அடம்பிடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மந்திரா சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள அடங்காதே படத்தில் சரத்குமாரும் உள்ளார். சுரபி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே