Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
அஜீத்தை வச்சு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: சுசீந்திரன்
Recommended Video
சென்னை: அஜீத்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
பைனான்ஸியர் என்ற பெயரில் அன்புச்செழியன் செய்த அடாவடியால் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அன்புச்செழியனின் முகத்திரையை கிழித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
அஜீத்தையும் அன்புச்செழியன் மிரட்டியதாக சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
விளம்பரம்
நான் கடவுள் படத்தின்போது அன்புச்செழியன் அஜீத்தை மிரட்டியதாகவும் அவரும் அசோக்கின் மனநிலைமையில் இருந்ததாகவும் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இதை பார்த்தவர்கள் என்ன அஜீத் பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறீர்களா என்று சுசீந்திரனிடம் கேட்டனர்.
தேவையில்லை
அஜீத் பெயரை சொல்லி விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அன்புச்செழியன் பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று நினைத்தே இதை எல்லாம் கூறுகிறேன் என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
அன்பு
அன்புச்செழியன் மட்டும் அல்ல நான் யாரிடமும் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார். அஜீத் மட்டும் அல்ல இயக்குனர்கள் லிங்குசாமி, கவுதம் மேனனும் அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் சுசீந்திரன்.
எதிர்பார்ப்பு
திரையுலகினரை ஆட்டிப் படைக்கும் அன்புச்செழியனை கைது செய்து அவரின் அடாவடித்தனத்திற்கு ஒரு முடிவு கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளது கோலிவுட்.