Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
100 குண்டுகளுடன் பாக். எல்லைக்குள் சென்று எதிரிகளை அழிப்பேன்: நடிகை ஆவேசம்
லூதியானா: நாட்டிற்காக உயிரைக் கொடுக்கத் தயார் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பியுள்ளார். அவரை வரவேற்று திரையுலக பிரபலங்களும், மக்களும் ட்வீட் போட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஆவேசமாக பேசியுள்ளார்.
மோடி
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கை மிகச் சரி. மோடி சரியானவற்றையே செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும் என்கிறார் ராக்கி.
ராக்கி சாவந்த்
நாட்டிற்காக நான் என் உயிரையும் கொடுப்பேன். தேவைப்பட்டால் நான் 50-100 வெடிகுண்டுகளுடன் எதிரியின் எல்லைக்குள் சென்று அவர்களை அழிப்பேன் என்று ராக்கி சாவந்த் ஆவேசமாக பேசியுள்ளார்.
அபிநந்தன்
அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார் ராக்கி. அபிநந்தன் நாடு திரும்பியதை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
விளம்பரம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் இந்த நேரத்திலும் கூட ராக்கி சாவந்த் விளம்பரம் தேட எதையாவது பேசுவதா என்று நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.