Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
Exclusive : “மக்களோட வெறுப்பை சம்பாதிக்கணும்”.. வில்லன் நடிகர் ரகு ஆதித்யாவின் பக்கா பிளான்!
மக்களின் வெறுப்பை சம்பாதித்தால் தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்கிறார் நடிகர் ரகு ஆதித்யா.
சென்னை: வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் தனது ஆசை என வில்லன் நடிகர் ரகு ஆதித்யா தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் சீமராஜா, விஜய் சேதுபதியின் தர்மதுரை என நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரகு ஆதித்யா.
இவர் வில்லனாக நடித்துள்ள தேவராட்டம் படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ரகு ஆதித்யா மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனால் தனது கதாபாத்திரன் மீது மக்களுக்கு வெறுப்பு தான் ஏற்பட்டுள்ளது என்கிறார் ரகு. இது குறித்து அவர் நம்மிடம் கூறியதாவது,
விஜய் நல்ல நடிகர் இல்லையா?: சித்திக், உண்மையில் என்ன தான் சொன்னார்?
தேவராட்டம்:
"முத்தையா சாருடன் மருது படத்திலேயே நான் வேலை பார்ப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. இந்நிலையில் தேவராட்டம் படத்தில் நடிக்க முத்தையா என்னை அழைத்தார்.
திருப்புமுனை:
படப்பிடிப்புக்காக மதுரைக்கு சென்றபோது தான் எனக்கு இப்படி ஒரு மோசமான வில்லன் கதாபாத்திரம் என்பது தெரிந்தது. இந்த ரோலில் நடித்தால் நமது பெயர் கெட்டுப்போய் விடுமே என முதலில் தயங்கினேன். ஆனால் முத்தையா சார் தான் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். அவர் சொன்னது போலவே, இந்த கதாபாத்திரம் எனக்கு சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மகிழ்ச்சி:
மக்களுடன் இணைந்து மதுரையில் படம் பார்த்தேன். அப்போது இடைவேளையின் போது கவுதம் என்னை வெட்டிக்கொன்றதும், ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்ந்தனர். இது தான் அந்த கதாபாத்திரத்தின் வெற்றி. மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தால் தான் வில்லனாக என்னால் உயர முடியும் என்பதை புரிந்து கொண்டேன்.
ஆசை :
எனது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. வில்லனாக மட்டுமல்லாமல், காமெடியனாகவும், இன்னும் பல கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். பார்ப்போம் சினிமா என்னை எந்த பாதையில் அழைத்து செல்கிறது", என ரகு ஆதித்யா கூறினார்.