Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பணக்காரரை மணந்தால் கஷ்டம் மறையும் என நினைத்தேன்.. அது தவறாகிவிட்டது.. பிரபல நடிகை உருக்கம்!
மும்பை: நான் திருமணம் செய்துகொண்டது பெரிய தவறு என நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.
தமிழில், ரவி- ராஜா இயக்கிய என் சகியே, ஶ்ரீநாத் இயக்கிய முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியவர் ராக்கி சாவந்த்.
இந்தி நடிகையான இவர், இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். மராத்தி, தெலுங்கு, போஜ்புரி படங்களில் நடித்துள்ளார்.
அது ஏடாகூட கேரக்டராச்சே.. 'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் நெகட்டிவ் அவதாரம் எடுக்கும் சிம்ரன்!
யூடியூப் பிரபலம்
இவர் சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் மணமகனை தேர்வு செய்து திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். அதன்படி, யூடியூப் மூலம் பிரபலமான தீபக் கலால் என்பதை திருமணம் செய்வதாக அறிவித்தார். பிறகு தனது திருமணத்தை ரத்து செய்துவிட்டதாக சொன்னார்.
இங்கிலாந்து தொழிலதிபர்
பின்னர் கடந்த வருடம் இங்கிலாந்து தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார். ஆனால், கணவர் பற்றியோ அவர் புகைப்படங்களையோ ராக்கி வெளியிடவில்லை. பின்னர் சில நாட்களுக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
கைவிட வேண்டாம்
அதில், 'நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். என்னை மட்டும் கைவிட்டுவிட வேண்டாம் என்று கணவருக்குத் தெரிவித்தார். இது பரபரப்பானது. இந்நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ராக்கி சாவந்திடம் அவர் திருமணம் பற்றி கேட்கப்பட்டது.
அறிவிக்க முடியலை
அப்போது அவர், 'எங்கள் திருமணம் காதல் மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்தது. என் கணவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிசினஸ்மேன். எங்கள் திருமணம் கடினமான சூழ்நிலையில் நடந்தது. அதனால் அப்போது அறிவிக்க முடியவில்லை. ரசிகர்களின் முன் உங்களை வெளிப்படுத்துங்கள் என்று அவரிடம் கூறிவிட்டேன்.
மிகப்பெரிய தவறு
ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்தியாவுக்கு அவர் வரவில்லை' என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பேட்டியில், நான் திருமணம் செய்துகொண்டது மிகப் பெரிய தவறு. என் கடன்களை கட்ட முடியாமல் திவாலாகி இருக்கிறேன். குடும்பச் சுமை என் தோள்மீது இருக்கிறது.
கஷ்டங்களில் இருந்து
பணக்காரரைத் திருமணம் செய்துகொண்டால், என் கஷ்டங்களில் இருந்து வெளியே வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அது தவறாக முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். 'இருந்தாலும் என் வாழ்க்கையை விட்டுவிடவில்லை. போராடிக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களை போலவே எனக்கும் மன அழுத்தம் இருக்கிறது.
Recommended Video
செய்ய மாட்டேன்
சிலர், இதன் காரணமாக தவறான முடிவை எடுக்கின்றனர். தங்கள் வாழ்வையே முடித்து கொள்கின்றனர். ஆனால், நான் அது போல செய்ய மாட்டேன். கடவுள் கொடுத்திருக்கிற இந்த வாழ்க்கை விலை மதிப்பில்லாதது என நம்புகிறேன் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.