Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சம்பள விவகாரம்.. மன்னிப்புக் கேட்டேனா? - பத்மப்ரியா விளக்கம்
பிரபல தமிழ், மலையாள நடிகை பத்மப்ரியா 'நம்பர் 66 மதுர பஸ்' என்ற மலையாள படத்தில் நடித்தபோது தனது மானேஜருக்கு ரூ.2 லட்சம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் நிஷாத் மற்றும் தயாரிப்பாளரிடம் வற்புறுத்தினார்.
ஆனால் மலையாள பட உலகில் இதுபோன்று கமிஷன் தர தடை உள்ளது. எனவே பத்மபிரியா மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் நிஷாத் புகார் செய்தார்.
இதையடுத்து படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்தது. உடனே பதறிப் போன பத்மபிரியா தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், இதனால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
இதுகுறித்து பத்மபிரியாவிடம் கேட்டபோது, "நாங்க சுமூகமாக பேசித் தீர்த்துக்கிட்டோம். இப்போ எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை. இது ஒரு கம்யூனிகேஷன் கேப் அவ்ளோதான். அதைப் போய் பெரிசுபடுத்திட்டாங்க," என்றார்.
இந்த விவகாரத்தை பெரிதாக மீடியை முன் கொண்டு வந்து முறையிட்டவரே பத்மப்ரியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.