Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விஜய் அரசியலுக்கு வர மாட்டார்னு நான் எப்ப சொன்னேன், ஆனால் அவர்...: எஸ்.ஏ.சி.
சென்னை: விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று நான் கூறவே இல்லை என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். தங்களின் விருப்பத்தை அவர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.
ரசிகர்கள்
விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று எஸ்.ஏ. சி. கூறியதை கேட்டு ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். விஜய்யை அரசியலுக்கு வரவிடாமல் எஸ்.ஏ.சி. தடுப்பதாகவும் கூறினர்.
இல்லை
விஜய் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் தனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் என தான் கூறவே இல்லை என தற்போது தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி.
அரசியல்
விஜய்யை அரசியலில் ஈடுபடுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் தற்போது உள்ள அரசியல் சூழல் சரியில்லை. இது என் கருத்து என்கிறார் எஸ்.ஏ.சி.
விஜய்
என் கருத்திற்கும், விஜய்க்கும் தொடர்பு இல்லை. அரசியல் குறித்து அவர் என்ன திட்டங்கள் வைத்துள்ளார் என தெரியவில்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.