Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிரபல இயக்குநரிடம் அறை வாங்கிய விக்ரம் ஹீரோயின்
ஹைதராபாத்: நடிகை ஒருவரை செட்டில் அறைந்ததாக பிரபல இயக்குநர் தேஜா தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு பட இயக்குநர் தேஜா. அவர் இயக்கத்தில் காஜல் அகர்வால் வித்தியாசமாக நடித்த சீதா படம் கடந்த மே மாதம் ரிலீஸாகி தோல்வி அடைந்தது. காஜலின் வித்தியாசமான முயற்சியை ஓவர் ஆக்டிங் என்று விமர்சித்துவிட்டார்கள்.
இந்நிலையில் அந்த படத்தை இயக்கிய தேஜா அண்மையில் அளித்த பேட்டியில் அதிர்ச்சிகரமான விஷயத்தை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது,
நான் என் பட ஹீரோயின் ஒருவரை அறைந்திருக்கிறேன். ஒரு காட்சியில் அனிதா ஹஸநந்தனி அழ வேண்டும். வழக்கமாக அது போன்ற காட்சிகளுக்கு ஒரு நாள் முன்பே ஹீரோயினை தயார் செய்வோம். ஆனால் திடீர் என்று அந்த அழுகை காட்சியை படமாக்கினோம். அழுமா அழுமா என்று நான் அனிதாவிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தேன். அவரோ சார் அழுகையே வரவில்லை என்றார்.
இந்த காட்சியில் அழவில்லை என்றால் நான் உங்களை அறைவேன் என்று சொல்லி நிஜமாகவே அறைந்துவிட்டேன். நான் அறைந்த வேகத்தில் அனிதா அழுக அந்த காட்சியை படமாக்கினோம். நான் அனிதாவை அறைந்ததை பார்த்தவர்கள் இயக்குநர் தேஜா செட்டில் கலைஞர்களை அடிக்கிறார் என்று வதந்தி கிளப்பிவிட்டனர் என்றார்.
தேஜா புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார். அந்த படத்திலும் காஜல் அகர்வால் தான் ஹீரோயினாம். சீதா படத்திற்கு முன்பு தேஜா ராணாவை ஹீரோவாக வைத்து இயக்கிய நேனு ராஜா நேனு மந்திரி படத்தின் ஹீரோயினும் காஜல் அகர்வால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வருஷமெல்லாம் வசந்தம் படம் மூலம் கோலிவுட் வந்த அனிதா விக்ரமின் சாமுராய் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். நாகினி 3 தொடரில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இளம் நடிகர் மரணம்: போகும் வயசா இது, நம்பவே முடியல- பிரபலங்கள் அதிர்ச்சி
மேலும் நாச் பாலியே 9 தொலைக்காட்சி நிகழ்ச்சியலும் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.