Don't Miss!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராணி முகர்ஜிக்கு கல்யாணமாச்சுன்னு உண்மையைத் தானே சொன்னேன்: சத்ருகன் சின்ஹா
மும்பையில் நடந்த மறைந்த பாலிவுட் இயக்குனர் யாஷ் சோப்ரா சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்ருகன் சின்ஹா பேசுகையில், யாஷ் சோப்ரா, பமீலா சோப்ரா, உதய் சோப்ரா, ராணி... நான் ஆதித்யா சோப்ராவின் பெயரை விட்டுவிட்டேன் என்று எனது மனைவி கூறுகிறார். ராணி சோப்ராவின் பெயரைக் குறிப்பிட்டால் அது ஆதித்யாவையும் தானே குறிக்கும் என்றார்.
ராணி முகர்ஜிக்கும் மறைந்த யாஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்ய சோப்ராவுக்கும் கடந்த ஆண்டே ரகசியமாக திருமணம் நடந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சத்ருகன் சின்ஹா பொது நிகழ்ச்சியில் ராணியை ராணி சோப்ரா என்று அழைத்தார்.
இது குறித்து சத்ருகன் சின்ஹா கூறுகையில்,
நான் உண்மையைத் தான் கூறினேன். ஒன்று என்னை பொது நிகழ்ச்சியில் பேச அழைத்திருக்கக் கூடாது. இல்லை நான் வெளிப்படையாகப் பேசுவதை ஏற்க தயாராகிக்கொள்ள வேண்டும். யாஷ் சோப்ரா பற்றி என்னை பேச அழைத்தார்கள். அவரின் குடும்பத்தாரின் பெயர்களை குறிப்பிடுகையில் நான் ஆதித்ய சோப்ராவின் பெயரை விட்டுவிட்டேன் என்று எனது மனைவி தெரிவித்தார். அதற்கு நான் ராணி சோப்ராவின் பெயரைக் கூறினால் அது ஆதித்யாவையும் குறிக்கும் என்றேன். இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நான் கூறியது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.