Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ராணி முகர்ஜிக்கு கல்யாணமாச்சுன்னு உண்மையைத் தானே சொன்னேன்: சத்ருகன் சின்ஹா
மும்பையில் நடந்த மறைந்த பாலிவுட் இயக்குனர் யாஷ் சோப்ரா சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்ருகன் சின்ஹா பேசுகையில், யாஷ் சோப்ரா, பமீலா சோப்ரா, உதய் சோப்ரா, ராணி... நான் ஆதித்யா சோப்ராவின் பெயரை விட்டுவிட்டேன் என்று எனது மனைவி கூறுகிறார். ராணி சோப்ராவின் பெயரைக் குறிப்பிட்டால் அது ஆதித்யாவையும் தானே குறிக்கும் என்றார்.
ராணி முகர்ஜிக்கும் மறைந்த யாஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்ய சோப்ராவுக்கும் கடந்த ஆண்டே ரகசியமாக திருமணம் நடந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சத்ருகன் சின்ஹா பொது நிகழ்ச்சியில் ராணியை ராணி சோப்ரா என்று அழைத்தார்.
இது குறித்து சத்ருகன் சின்ஹா கூறுகையில்,
நான் உண்மையைத் தான் கூறினேன். ஒன்று என்னை பொது நிகழ்ச்சியில் பேச அழைத்திருக்கக் கூடாது. இல்லை நான் வெளிப்படையாகப் பேசுவதை ஏற்க தயாராகிக்கொள்ள வேண்டும். யாஷ் சோப்ரா பற்றி என்னை பேச அழைத்தார்கள். அவரின் குடும்பத்தாரின் பெயர்களை குறிப்பிடுகையில் நான் ஆதித்ய சோப்ராவின் பெயரை விட்டுவிட்டேன் என்று எனது மனைவி தெரிவித்தார். அதற்கு நான் ராணி சோப்ராவின் பெயரைக் கூறினால் அது ஆதித்யாவையும் குறிக்கும் என்றேன். இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நான் கூறியது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.