Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நான் ஒரு திருநங்கையாக பிறந்திருக்கணும்: அடிக்கடி சொல்லும் இயக்குனர்
சென்னை: நான் ஒரு டிரான்ஸ்ஜென்டராக பிறந்திருக்கணும் என இயக்குனர் மிஷ்கின் அடிக்கடி கூறுவார் என கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கத்தில் ராம், பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சவரக்கத்தி. இந்த படத்தை தயாரித்ததோடு மட்டும் அல்லாமல் வில்லனாகவும் நடித்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறுகையில்,
சவரக்கத்தி படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் உள்ளது. மிஷ்கினை எந்த ஒரு அடையாளத்திற்குள்ளும் அடக்க முடியாது. அவர் தனிமையின் சாண்டாகிளாஸ்.
நான் ஒரு டிரான்ஸ்ஜென்டராக பிறந்திருக்கணும் என அவர் அடிக்கடி கூறுவார். அவர் ஒரு ஆண் அல்லது பெண்ணை அணைத்தால் அவ்வளவு பாதுகாப்பாக உணர முடியும். பாதுகாப்பையும், பேரன்பையும் கொடுப்பவர். படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.