Don't Miss!
- News கடலூரில் திமுக மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு.. போலீஸ் குவிப்பு
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெண்களின் உடலை தான் பிடிக்கும், மூளை அல்ல: ராம் கோபால் வர்மா
மும்பை: நான் பெண்களை உறவுக்கு மட்டும் தான் பயன்படுத்துவேன் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்துள்ளார்.
நடிகையும், பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குப் பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் மை ஒயிப்ஸ் மர்டர் மற்றும் ரான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது மெழுவர்த்தி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுசித்ரா புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் ராம் கோபால் வர்மா பற்றி சில விஷயங்களை எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு,
கட்டிக்க ஆசை
சுசித்ராவுக்கு ராம் கோபால் வர்மாவை திருமணம் செய்ய ஆசை. இதையடுத்து அவர் ராமு நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். வெகு நேரம் கழித்து பதில் அனுப்பிய ராமு தன்னை சந்திக்குமாறு அதில் தெரிவித்துள்ளார்.
ஆடிப்போன சுசி
ராம் கோபால் வர்மா என்ன பதில் சொல்வாரோ என்று நினைத்து அவரை ஆவலுடன் சந்தித்த சுசித்ராவுக்கு அவர் அளித்த பதில் அதிர்ச்சி அளித்தது.
பெண்கள் அதுக்கு தான்
சுசித்ரா நீ என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளாய். நாம் வெவ்வேறு குணம் கொண்டவர்கள். மேலும் எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. நான் பெண்களை உறவுக்கு மட்டும் தான் பயன்படுத்துவேன். அது மட்டும் தான் உனக்கு தேவை என்று இல்லை. எனக்கு பெண்களின் உடல் தான் பிடிக்கும். அவர்களின் மூளை பிடிக்காது. என்னை பொறுத்த வரை பெண்கள் பார்க்கத் தான் கேட்க இல்லை என்று சர்ச்சை ஆசாமி ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
அனுமதி
நான் எழுதிய புத்தகத்தில் இந்த சம்பவத்தை குறிப்பிட ராம் கோபால் வர்மாவிடம் அனுமதி பெற்றுவிட்டேன். இல்லை என்றால் என்னால் எப்படி இதை எழுதியிருக்க முடியும் என்று சுசித்ரா பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.