என் கடமையைச் செஞ்சுட்டேன்.. ஆனால் மாற்றம்.. சிவகார்த்திகேயன் நச் பேட்டி
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஜன நாயக கடமையை செய்து முடித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் கூறுகையில், " பலரும் எதிர்பார்க்கும் தேர்தலாக இந்த தேர்தல் மாறி உள்ளது. இந்த தேர்தலில் தான் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம் உள்ள தேர்தலாக உள்ளது. இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்கு நானும் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். மாற்றம் வருமா என்பதை மக்கள் அனைவரும் சேர்ந்துதான் சொல்ல வேண்டும், நான் ஒருவன் மட்டும் சொன்னால் போதாது. என் கடமையை நான் சரியாக செய்துள்ளேன்" என்று பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Comments


Click it and Unblock the Notifications