Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஆர்யா மீது ஃபீலிங்ஸ் வந்துவிட்டது, டச்சில் தான் உள்ளேன்: சீதாலட்சுமி
சென்னை: ஆர்யாவுடன் இன்னும் டச்சில் இருப்பதாக எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஆர்யாவுக்கு பெண் தேட நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இறுதி வரை வந்தவர் சீதாலட்சுமி. சீதாலட்சுமி, சுசன்னா, அகாதா ஆகிய மூவரில் ஒருவரை ஆர்யா தேர்ந்தெடுத்திருக்க வேண்டியது. ஆனால் அவர் யாரையும் தேர்வு செய்யவில்லை.
இந்நிலையில் நிகழ்ச்சி மற்றும் ஆர்யா குறித்து சீதாலட்சமி கூறியதாவது,
ஆர்யா
சும்மா தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்தேன். தேர்வு செய்யப்பட்டதும் லைட்டா டென்ஷனாகிவிட்டது. இருந்தாலும் பரவாயில்லை முயற்சி செய்யலாம் என்று சென்றேன். அங்கு எனக்கு தெரிந்த ஸ்ரியாவை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.
கல்லூரி நாட்கள்
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் நன்றாக பழகினார்கள். எனக்கு கல்லூரி நாட்களை அது நினைவூட்டியது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் நாங்கள் அனைவரும் ஒருத்தர் மீது ஆர்வமாக இருந்தோம். முதலில் மேடை பயம் இருந்தது. ஆனால் அதன் பிறகு இல்லை.
சங்கீதா
முதலில் ஆர்யா, சங்கீதா மேடத்தை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல ஆர்யா மீது ஃபீலிங்க்ஸ் வந்துவிட்டது. பினாலேவில் நடந்ததை நாங்களும் எதிர்பார்க்கவில்லை. நான் ஆர்யாவை திருமணம் செய்யாவிட்டாலும் என் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தாரின் மதிப்பை பெற்றுள்ளேன்.
எங்களில் ஒருவர்
ஆர்யாவை முதலில் நடிகராக மட்டுமே பார்த்தோம். பின்னர் அவர் எங்களில் ஒருவர் ஆகிவிட்டார். எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தார். நான் அவரை இம்பிரஸ் செய்ய பெருமுயற்சி செய்தேன். அவர் என் மீது அக்கறை கொண்டிருந்தார். அவர் உண்மையாக நடந்து கொண்டார். நான் தவறு செய்தபோது கூட ஊக்குவித்தார்.
எதிர்பார்ப்பு
ஆர்யா யாராவது ஒரு பெண்ணை தேர்வு செய்வார் என்றே நினைத்தேன். அவர் தனது முடிவை அறிவித்ததும் எனக்கு குழப்பமாகிவிட்டது. நான், அகாதா, சுசன்னா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தோம். கேமராவுக்கு முன்னால் இதை ஆர்யாவால் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்தேன். அவரின் முடிவை மதிக்கிறேன்.
டச்
நான் இன்னும் ஆர்யாவுடன் டச்சில் தான் உள்ளேன். எதிர்காலத்தில் எங்களுக்கு இடையே ஏதாவது ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். நான் முதலில் அபர்நதியை தவறாக புரிந்து கொண்டேன். பின்னர் தான் அவர் நல்லவர் என்பதை தெரிந்து கொண்டேன் என்று சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
-
2வது திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ்.. சித்தார்த்துடன் தெலங்கானா கோயிலில் ரகசிய கல்யாணம்?
-
ஒரு ஊருக்கே கிடா விருந்து.. மகள், மாப்பிள்ளைக்கு தடபுடலாக வந்த உணவு.. அமர்களப்படுத்திய ரோபோ ஷங்கர்!
-
அண்டங்காக்கா கொண்டக்காரி மாதிரியே இருக்கே.. ராம்சரணுக்கு பட்டை நாமம் போட்டு விடுவாரோ ஷங்கர்?