Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
செட்ல தளபதி செல்போன் யூஸ் பண்ணி நான் பார்த்ததே இல்ல... மகேந்திரன் சிலிர்ப்பு
சென்னை : மாஸ்டர் படத்தில் இளவயது பவானி கேரக்டரில் நடித்து சிறப்பான கமெண்ட்ஸ் வாங்கியுள்ளார் நடிகர் மகேந்திரன்.
தன்னுடைய 3 வயதிலிருந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் மகேந்திரன்.
டைட்டான
டிரஸ்ஸில்
வாழைத்தண்டு
தொடையழகை
காட்டி
தெறிக்கவிடும்
ரம்யா
பாண்டியன்!
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் குறித்த நினைவுகளை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடரும் திரைப்பயணம்
தன்னுடைய 3 வயதிலிருந்து நடித்து வருகிறார் நடிகர் மகேந்திரன். கடந்த 15 ஆண்டுகளாக அவரது திரைப்பயணம் தொடர்ந்து வருகிறது. 6 மொழிகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இது இந்தியாவில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

சிறந்த குழந்தை நட்சத்திர விருது
கடந்த 1994ல் வெளியான நாட்டாமை படத்தில் அறிமுகமான மகேந்திரன் அதற்கு அடுத்த ஆண்டே தாய்க்குலமே தாய்க்குலமே என்ற படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு மாநில விருதை பெற்றார். இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் குட்டி பவானி கேரக்டரில் நடித்துள்ளார்.

சிறப்பான கமெண்ட்ஸ்
இந்த படம் அவருக்கு சிறந்த கமெண்ட்ஸ்களை பெற்றுத் தந்துள்ளது. அந்த கேரக்டர் குறித்து இயக்குநர் லோகேஷிடம் நடிகர் விஜய் பாராட்டியதாகவும் அந்த கேரக்டருக்கு மகேந்திரன் சிறப்பாக பொருந்தியதாக அவர் கூறியதாகவும் படம் வெளிவந்த நேரத்தில் மகேந்திரன் தெரிவித்திருந்தார்.

செல்போன் உபயோகிக்காத விஜய்
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய் குறித்த நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். மாஸ்டர் படத்தின் சூட்டிங்கின்போது செட்டில் விஜய் செல்போன் உபயோகிப்பதை தான் ஒருபோதும் பார்த்ததில்லை என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல மற்ற படங்களின் சூட்டிங்கின்போதும் அவர் செல்போன் பயன்படுத்த மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காமெடி செய்யும் தளபதி
அவர் மிகவும் அமைதியானவர் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், ஆனால் செட்டில் மற்றவர்களை கலாய்த்து காமெடி செய்வார் என்று மகேந்திரன் கூறியுள்ளார். அவர்களின் தோள்களில் கையை வைத்து அவர் உரிமையுடன் கலாய்ப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.