Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாவனாவை அசிங்கப்படுத்த நான் ஆள் அனுப்பவில்லை: பதறும் வாரிசு நடிகர்
திருவனந்தபுரம்: பாவனா கடத்தலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று மலையாள நடிகர் சித்தார்த் பரதன் தெரிவித்துள்ளார்.
நடிகை பாவனா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டார். பாவனாவை ஆள் வைத்து கடத்தியது மலையாள நடிகர் சித்தார்த் பரதன் என்ற பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் இது குறித்து பரதன் கூறியிருப்பதாவது,
அதிர்ச்சி
நடிகை பாவனா விஷயத்திற்கு நான் தான் காரணம் என்று பலரும் என்னை கை காட்டுவது அதிர்ச்சியாக உள்ளது. எங்கிருந்து தான் இது போன்ற பொய்யான செய்திகள் கிளம்பி பரவுகின்றது என்றே தெரியவில்லை.
கொடுமை
நடிகைக்கு நடந்த கொடுமைக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள நாங்கள் எல்லாம் ஆவலோடு இருக்கும்போது நானும் ஒரு குற்றவாளி என்று தகவல் பரவியுள்ளது.
விளக்கம்
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி சரியான நேரத்தில் விளக்கம் அளிப்பேன் என பரதன் தெரிவித்துள்ளார். பரதன் பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி. லலிதாவின் மகன் ஆவார்.
திலீப்
முன்விரோதம் காரணமாக தனக்கு நெருக்கமான பல்சர் சுனிலை ஏவி பாவனாவை மானபங்கப்படுத்தி நடிகர் திலீப் பழிதீர்த்துக் கொண்டார் என்று முதலில் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டை திலீப் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.