Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போதும்டா சாமி, தேவி படத்தால் நான் கஷ்டப்பட்டது போதும்: விஜய்
சென்னை: தேவி படம் போன்று இனி மூன்று மொழி படங்களை இயக்கவே கூடாது என்ற அளவுக்கு கஷ்டப்பட்டதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது.
இந்நிலையில் படம் குறித்து விஜய் கூறுகையில்,
பிரபுதேவா
தேவி படத்தில் பிரபுதேவாவின் நடிப்பை மிகவும் ரசித்தேன். அவரை வைத்து நிறைய படங்களை இயக்க ஆசையாக உள்ளது. தேவி ஹீரோயினை முன்னிலைப்படுத்தும் கதையாக இருந்தது. பிரபுதேவா வந்ததும் அது ஹீரோ படமாகிவிட்டது.
பெருமை
பிரபுதேவா சிறப்பாக நடித்துக் கொடுத்தார். நான் எதிர்பார்த்ததற்கு மேல் நடித்துள்ளார். அவர் எப்பொழுதும் உறசாகமாக இருப்பார். அவரை வைத்து படம் இயக்கியதில் பெருமையாக உள்ளது.
கஷ்டம்
தேவி படத்தை ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் இயக்க கஷ்டமாக இருந்தது. பிரபுதேவா எளிதாக மூன்று மொழிகளிலும் எளிதில் பேசி நடித்துவிடுவார். பிற நடிகர்களை மூன்று மொழிகளிலும் வசனம் பேச வைப்பதற்குள் 3 படங்களை எடுத்தது போன்று இருந்தது.
தேவி
தேவிக்காக இரவு, பகலாக சரியாக தூங்காமல் வேலை பார்த்துள்ளோம். இனி மூன்று மொழி படங்களை இயக்கவே கூடாது என்ற அளவுக்கு கஷ்டப்பட்டுள்ளேன். இருப்பினும் பிரபுதேவா, தமன்னா, சோனுவின் ஒத்துழைப்பால் இந்த படம் சாத்தியமானது.