Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினிக்கு ஏற்ற கதைக்காக காத்திருக்கிறேன்...! - எஸ்எஸ் ராஜமௌலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் ஆசை இன்றைல்ல.. பல ஆண்டுகளாக எனக்கு உண்டு. ஆனால் நல்ல கதைக்காகக் காத்திருக்கிறேன் என்று இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கூறியுள்ளார்.
மகதீரா வெளியானதிலிருந்தே ரஜினி - ராஜமௌலி கூட்டணி பற்றி பேச்சு கிளம்பிவிட்டது. இப்போது பாகுபலி உலகையே அதிர வைத்துக் கொண்டுள்ள நிலையில், ரஜினியை ராஜமௌலி எப்போது இயக்கப் போகிறார் என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கெனவே பல மேடைகளில் ரஜினியை இயக்கும் தன் ஆசையை ராஜமௌலியும், அவர் இயக்கத்தில் நடிக்க எப்போதும் தயார் என ரஜினியும் கூறிவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அப்படி ஒரு கேள்வியை ராஜமௌலியிடம் வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், "ரஜினியை வைத்து படம் பண்ணும் ஆசை முன்பை விட இப்போது அதிகமாகவே உள்ளது. ஆனால் அது சாதாரண விஷயம் கிடையாது. ரஜினி மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். அதை மனதில் வைத்து படத்தை உருவாக்க வேண்டும். அவருக்கேற்ற கதை அமைவது மிகவும் கடினம்.
அந்த மாதிரி ஒரு கதை எனக்கு அமைந்தால் என்னைவிட இந்த உலகத்தில் பெரிய மகிழ்ச்சியான ஆள் இருக்கவே முடியாது. ரஜினிக்கேற்றவாறு கதை அமைந்தால் கண்டிப்பாக அவரை வைத்து படம் இயக்குவேன்," என்றார்.