Don't Miss!
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 'அப்பா'வை ரீமேக் செய்திட விருப்பம்- சமுத்திரக்கனி
சென்னை: தமிழ் தவிர மேலும் 11 மொழிகளில் அப்பா படத்தை ரீமேக் செய்திட விரும்புகிறேன் என்று நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தெரிவித்திருக்கிறார்.
சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து அவரே நடிக்கவும் செய்திருக்கும் படம் அப்பா. ஜூலை 1 ம் தேதி 250 க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் கதையை இந்தியாவின் மூலை, முடுக்குகளிலும் கொண்டு செல்லப் போவதாக சமுத்திரக்கனி தெரிவித்திருக்கிறார்.
கன்னடம்
இதுகுறித்து அவர் '' அப்பா படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்க நடிகர் சிவராஜ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். இதேபோல இயக்குநர் பிரியதர்ஷனும் விரைவில் இப்படத்தை பார்க்கவிருக்கிறார்.அவருக்கு இப்படம் பிடித்திருந்தால் இதன் இந்தி ரீமேக்கை தயாரிப்பார்.தெலுங்கில் வெங்கடேஷ், நாகர்ஜுனா இருவரில் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
சாட்டை
சாட்டை படத்தில் நடிக்கும்போதே இப்படத்தை இயக்குமாறு அன்பழகனிடம் கூறி, அதற்கு ஒரு தொகையையும் அட்வான்ஸாகக் கொடுத்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக இப்படத்திற்கு முன் அவர் பிரபு சாலமன் படத்திற்கு சென்றுவிட்டார். அதனால் அப்பாவை நானே இயக்கி, தயாரிக்க முடிவு செய்தேன். இதனை அன்புவிடம் கூறியபோது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
34 நாட்கள்
கடுமையான சூழ்நிலைகளுக்கு இடையில் இப்படத்தை வெறும் 34 நாட்களில் எடுத்து முடித்து விட்டேன். 3 அப்பா, 3 மகன்களுக்கு இடையேயான கதைதான் இந்த அப்பா. நம் சமூகத்தைப் பொறுத்தவரை குறை என்பது குழந்தைகளிடம் இல்லை. நமது கல்வி முறையிலும், அப்பாக்களின் வளர்ப்பிலும் தான் இருக்கிறது.
தற்கொலை
கல்வியால் நடைபெறும் தற்கொலைகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. ஒரு மாணவியின் தற்கொலையால் இந்த விவரங்களை சேகரிக்க சொன்னேன். அதன்படி சுமார் 4 வருடங்களாக பேப்பர்களில் வரும் தகவல்களை சேகரித்து அதிலிருந்து இந்தப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன்'' என்றார்.
ஜூலை 1 ம் தேதி வெளியாகும் 'பைசா', 'மெல்லிய கோடு', 'ஜாக்சன் துரை' ஆகிய படங்களுடன் சமுத்திரக்கனியின் 'அப்பா' மோதுவது குறிப்பிடத்தக்கது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?