Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பட வாய்ப்பு வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணச் சொன்னார்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ் பரபர பேட்டி
மும்பை: 5 ஆண்டுகளுக்கு முன்பு பட வாய்ப்புக்காக தன்னை அட்ஜஸ்ட் செய்யச் சொன்னதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
காக்கா முட்டை படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் அவர் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் சினிமா பற்றி பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
பாலிவுட்
தென்னிந்திய படங்களை போன்று பாலிவுட்டில் உள்ளவர்கள் நடிகைகள் சிகப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. தற்போது பல விஷயங்கள் மாறியுள்ளது.
அட்ஜஸ்ட்மென்ட்
5 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா வாய்ப்பு தேடியபோது என்னை அட்ஜஸ்ட் செய்யச் சொன்னார்கள். இந்த பிரச்சனை எனக்கு இருந்தது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் தெரிவித்து அசிங்கப்படுத்திவிடுவார்கள் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
சம்பளம்
தற்போது பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட் செய்யத் தேவையில்லை. 2017ம் ஆண்டிலும் நடிகர், நடிகைகளுக்கு அளிக்கப்படும் சம்பளத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது.
நயன்தாரா
முன்னணி நடிகர்கள் படம் ஒன்றுக்கு ரூ.10 கோடி வாங்கினால், முன்னணி நடிகையான நயன்தாராவுக்கு ரூ. 3 கோடி மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த விஷயம் மாறவில்லை.
படங்கள்
கவுதம் மேனின் துருவ நட்சத்திரம், வெற்றிமாறனின் வடசென்னை, இது வேதாளம் சொல்லும் கதை, மணிரத்னம் படம் என்று நிறைய படங்கள் இருந்தாலும் இப்போது தான் சினிமா வாழ்க்கை துவங்குவது போன்று உள்ளது.
இந்தி
டாடி படத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கு இந்தி தெரியுமா என்று நடிகர் அர்ஜுன் ராம்பல் கேட்டார், தெரியாது என்றேன். உடனே வேறு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்தனர். அதன் பிறகு ஆடிஷனுக்கு வருமாறு துணை இயக்குனர் ஒருவர் தெரிவித்தார். அவர்களின் ஆஷா காவ்லி கதாபாத்திரம் போன்றே நான் இருந்ததால் என்னை ஒப்பந்தம் செய்தனர் என்றார் ஐஸ்வர்யா.