Don't Miss!
- News பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
விஜய்யை வைத்து படம் இயக்க 2004-லேயே ராஜமௌலியிடம் கேட்டேன்! - கலைப்புலி தாணு
சென்னை: விஜய்யை வைத்து என் பேனரில் ஒரு படம் இயக்கித் தருமாறு 2004-லேயே நான் ராஜமௌலியிடம் கேட்டிருக்கிறேன், என்று புதிய தகவலை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
பாகுபலி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசுகையில், "இந்தியத் திரையுலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இது.
எத்தனையோ இயக்குநர்கள் என்னுடன் பணியாற்றியபோதும் எனக்கு ராஜமெளலியுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை.
2004-ம் ஆண்டிலேயே (சச்சின் வெளியான நேரம்) நான் ராஜமெளலியுடன் பேசி 'விஜய்யை வைத்து ஒரு படத்தை நீங்கள் இயக்க வேண்டும்' என்றேன். 'இப்போது இரண்டு படங்களில் பணியாற்ற இருக்கிறேன். அப்புறம் பார்ப்போம்..' என்று அவர் சொல்ல.. அது அப்படியே தள்ளித் தள்ளிப் போய் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது.
எங்களது சத்யராஜ், புரட்சித் தலைவரின் வாரிசு. இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவர் வாள் எடுத்து வீசும் காட்சியை பார்த்தபோது அப்படியொரு சந்தோஷமாக இருந்தது. அவரும் ஆந்திராவில் மிகப் பெரிய புகழைப் பெற்றுவிட்டார் என்பதை நினைக்கையில் எனக்கும் பெருமையாக இருக்கிறது..
இந்தப் படம் உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருப்பதால் 'பாகுபலி-1' பெற்ற வெற்றியைவிடவும் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்," என்றார்.