7 வயதிலேயே என்னிடம் ஏடாகூடம் செய்து விட்டார்கள்.. நடிகை பகீர் தகவல்
மும்பை: 7 வயதில் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை மல்லிகா தெரிவித்துள்ளார்.
பாதி பஞ்சாபி, பாதி தமிழ் பிராமின் பொண்ணு மல்லிகா துவா. மும்பையில் தங்கி காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்தி மீடியம் பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

கார்
மீட்டூ... என்னுடைய காரில். என் அம்மா காரை ஓட்ட அவன் பின் சீட்டில் தனது கையை என் பாவாடைக்குள் வைத்திருந்தான். அப்போது எனக்கு வயது 7 என தெரிவித்துள்ளார் மல்லிகா.
கயவன்
அவன் கைகள் என் பாவாடைக்குள் அனைத்து இடங்களுக்கும் சென்றது. என் சகோதரியையும் அவன் விட்டு வைக்கவில்லை. வேறு காரில் இருந்த என் தந்தைக்கு இது தெரிய வந்து அன்று இரவு அந்த கயவனின் தாடையை உடைத்தார் என்று மல்லிகா கூறியுள்ளார்.

மீட்டூ
உலக பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். அவ்வாறு கூறுபவர்கள் Me TOO என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

தயாரிப்பாளர்
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு தேடி வந்த நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அது குறித்து நடிகைகள் தற்போது தான் தைரியமாக வெளியே சொல்லத் துவயங்கியுள்ளனர். இதையடுத்தே உலக பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றியும் தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











