Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விஜய்யுடன் குத்தாட்டம் போட்ட போது நான் 2 மாதம் கர்ப்பம்...உண்மையை உடைத்த பிரபல நடிகை
சென்னை : 1999 ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடித்த உன்னைத் தேடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா. அதைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, பேரழகன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், சந்திரமுகி போன்ற படங்களில் நடித்தார்.
இதைத் தவிர மிஸ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கு பாடலுக்கு நடனமாடி, பலரின் மனங்களையும் கொள்ளையடித்தார். அதைத் தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரான சுமேஷ் மேனன் என்பவரை 2007 ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
'’RRR’’ புதிய போஸ்டர்… ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளில் ரிலீஸ் !
தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா தனது ஃபோட்டோக்களை தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், கோலிவுட்டில் நடித்த காலங்களில் நடந்த அனுபவங்களை வெளிப்படையாக பேசி உள்ளார்.
அப்போது அவர், குருவி படத்தில் டன்டனக்கா டர்னா பாடலுக்கு விஜய் உடன் நடனமாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தேன். இந்த தகவலை டான்ஸ் மாஸ்டரிடம் தெரிவித்தேன். இதைப் புரிந்து கொண்டு, அந்த பாடலில் எனக்கு எளிமையான ஸ்டெப்களை கொடுத்தார்.
ஆனால் விஜய்க்கு ஈடுகொடுத்து ஆடுவது எனக்கு சிரமமானதாக இருந்தது. அது எனது கடைசி படம் என நினைத்துக் கொண்டேன். ஆனால் முழு மனதுடன் முயற்சித்து அந்த பாடலுக்கு ஆடி முடித்து விட்டேன். ஆனால் அதற்கு பிறகு சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்ததன் மூலம் எனது கனவு நிஜமாகி விட்டது என்றார்.