Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
16 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்
நியூயார்க்: 16 வயதில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நடிகையும், மாடலுமான பத்மா லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
நடிகை, மாடல், எழுத்தாளர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி என்று பன்முகம் கொண்டவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆன பத்மா லக்ஷ்மி. இந்நிலையில் அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார்.
[ பாஸ் பாஸ் தான்...! மணிரத்னத்தை புகழும் சித்தார்த்! ]
தன் வாழ்வில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பத்மா லக்ஷ்மி கூறியதாவது,
கல்லூரி
எனக்கு 16 வயது இருக்கும்போது நான் ஒருவரை டேட் செய்தேன். அவரை லாஸ் ஏஞ்சல்ஸில் சந்தித்தேன். பள்ளி முடிந்த பிறகு ராபின்சன்ஸ்-மே கடையில் வேலை பார்த்தேன். அவர் ஆண்களுக்கான கடை ஒன்றில் வேலை செய்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவர் என்னிடம் வந்து கடலை போடுவார். 23 வயதான அவர்கள் அழகாக இருப்பதாக நினைத்தேன்.
கன்னி
நாங்கள் வெளியே சென்றுவிட்டு வந்தால் காரை வெளியே பார்க் செய்துவிட்டு என் வீட்டிற்கு வந்து என் அம்மாவுடன் பேசுவார். அவர் என்னை ஒரு நாள் இரவு கூட லேட்டாக அழைத்து வந்து விட்டது இல்லை. நான் வெர்ஜின் என்பது அவருக்கு தெரியும். எப்பொழுது உறவு வைத்துக் கொள்ளலாம் என்பதில் எனக்கு தெளிவு இல்லாமல் இருந்தது.
புத்தாண்டு
புத்தாண்டு பிறக்கும் இரவு அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நாங்கள் டேட் செய்ய துவங்கிய சில மாதங்களில் இது நடந்தது. உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள பிரெட் கவானா குறித்து 2 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் எனக்கு பழைய சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது. கவானா கிறிஸ்டீன் பிளாசி மீது அமர்ந்து அவரது வாயை பொத்திக் கொண்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவர்கள் உயர் நிலை பள்ளியில் படித்தபோது இது நடந்துள்ளது.
டிரம்ப்
கவானா ஆடையை கழற்றிவிட்டு தன் முன்பு நின்றதாக டெஸ்போரா ராமிரெஸ் தெரிவித்துள்ளார். பிளாசி சொல்வது உண்மை என்றால் அவர் ஏன் அப்பொழுதே போலீசில் புகார் அளிக்கவில்லை என்று அதிபர் டிரம்ப் ட்வீட்டியுள்ளார். அந்த 2 பெண்களும் இத்தனை ஆண்டுகளாக ஏன் அமைதியாக இருந்தார்கள் என்பது எனக்கு புரிகிறது. பல ஆண்டுகளாக நானும் அதையே தான் செய்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு நடந்தது பற்றி தற்போது ட்வீட் செய்திருக்கிறேன்.
பாலியல் தொல்லை
எனக்கு 7 வயது இருக்கும்போது மாற்றாந்தந்தையின் உறவினர் ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து நான் என் அம்மா மற்றும் மாற்றாந்தந்தையிடம் கூறியபோது அவர்கள் என்னை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து என் தாத்தா, பாட்டியுடன் தங்க வைத்தனர். இது போன்ற விஷயங்கள் குறித்து பேசினால் நம்மை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்றார் பத்மா லக்ஷ்மி.