Don't Miss!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
11 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: பெண்ணாக மாறிய நடிகர் பகீர் தகவல்
மும்பை: தான் 11 வயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண்ணாக மாறிவரும் நடிகர் கவுரவ்(கவுரி) அரோரா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகரும், மாடலுமான கவுரவ் அரோரா பெண்ணாக மாறி வருகிறார். தனது பெயரை கவுரி என மாற்றியுள்ளார். தான் பெண்ணாக மாறிய பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்நிலையில் அவர் பிரபல ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
பலாத்காரம்
நான் 11 வயதில் பள்ளியில் உள்ள சீனியர் பையன்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். முதலில் சீனியர்கள் என் மீது பாசமாக இருந்தது எனக்கு பிடித்திருந்தது.
பெண்
எனக்குள் அப்பொழுதே பெண் உணர்வு இருந்திருக்கிறது. அதனால் பையன்களால் கவரப்பட்டுள்ளேன். சீனியர்கள் பலாத்காரம் செய்ததில் வலியால் துடித்தேன். அது தவறு என்று மட்டும் தெரிந்தது.
தாய்
பள்ளியில் நடந்ததை என் தாயிடம் தெரிவித்தேன். ஆனால் அவரோ இதை உன் தந்தையிடம் கூறாதே என்றார். நான் தாயின் பேச்சை மீறி தந்தையிடம் தெரிவித்தேன்.
போலீஸ்
என் தந்தை உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது. ஏதோ நானே விரும்பிச் சென்றது போன்று என்னை பார்த்தார்கள்.