Don't Miss!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விஜய்க்கு கோபம் வந்தால் என்ன செய்வார்?: அம்மா ஷோபா விளக்கம்
சென்னை: விஜய் நடிக்க வந்தது பயமாக இருந்தது. விஜய் இந்த அளவுக்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை என்று அவரது தாய் ஷோபா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய்யை நடிகனாக்கி வளர்த்துவிட்டவர். தற்போது விஜய் தொட்டுள்ள உயரத்தை பார்த்து பெருமையுடன் உள்ளார் எஸ்.ஏ.சி.
இந்நிலையில் அவரும், அவரது மனைவி ஷோபாவும் பிரபல இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
தனுஷ்
எங்களின் குடும்பத்தாருக்கே மிகவும் பிடித்த நடிகர் தனுஷ் என எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தனுஷின் கொடி படத்தில் நடிக்க எஸ்.ஏ.சி.க்கு வாய்ப்பு வந்தபோது உடனே அதை ஒப்புக்கொள்ளுமாறு கூறினேன் என்கிறார் ஷோபா.
விஜய்
விஜய் அடுத்தடுத்து வெற்றி கொடுப்பது அவரது கடின உழைப்பு மற்றும் கடவுளின் கிருபை. விஜய் நடிக்க வந்தது பயமாக இருந்தது. விஜய் இந்த அளவுக்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ஷோபா.
சச்சின்
விஜய் நடித்த காதலுக்கு மரியாதை ஷோபாவுக்கு மிகவும் பிடித்த படமாம். எஸ்.ஏ.சி.க்கு சச்சின் படம் பிடிக்குமாம். சச்சினில் விஜய் க்யூட்டாக நடித்திருப்பார், எப்பொழுது சச்சின் படத்தை டிவியில் போட்டாலும் பார்ப்பேன். பாடி லேங்குவேஜ் செமயா இருக்கும். நீ நல்லா நடிச்சிருக்கன்னு நான் முதன்முதலாக விஜய்யிடம் சொன்ன படமும் சச்சின் தான் என எஸ்.ஏ.சி. தெரிவித்துள்ளார்.
உணர்ச்சி
விஜய் சந்தோஷமாக இருக்கிறாரா, கோபமாக இருக்கிறாரா, கவலையாக இருக்கிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியாது. எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ள மாட்டார் என ஷோபாவும், எஸ்.ஏ.சி.யும் கூறியுள்ளனர்.