Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'கார் டிரைவர் நடவடிக்கைகள் அச்சுறுத்துவதாக இருந்தது..' நடந்தது என்ன? பிரபல கவர்ச்சி நடிகை விளக்கம்!
ஐதராபாத்: ஐதராபாத் கார் டிரைவர் புகார் கூறிய விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி நடிகை முமைத் கான் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகை முமைத் கான், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் வசித்து வரும் அவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன் கார் டிரைவர் கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
நிம்மதியே போச்சு.. விசாரணைக்கு போனாலே நான் குற்றவாளியா..? கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை!
கார் டிரைவர்
தனக்குத் தர வேண்டிய 15000 ரூபாயைத் தராமல் ஏமாற்றியதாக கார் டிரைவர் ராகவா ராஜூ என்பவர் முமைத்கான் மீது புகார் கூறி இருந்தார். முமைத் கான் கோவா செல்ல வேண்டும் என்று என் காரை புக் செய்தார். அங்கு 3 நாட்கள் இருக்க வேண்டும் என்றார். சென்றேன்.
பின்னர் மூன்று நாட்களை 8 நாட்கள் ஆக்கினார்.
ரூபாயைத் தரவில்லை
ஆனால், தனக்கு தர வேண்டிய வாடகை பணமான, 15000 ரூபாயைத் தரவில்லை என்று கூறி இருந்தார். ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய போன் நம்பருடன் கூடிய முகவரி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்திய ரசீதுகள், ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.
டிரைவர் மீது புகார்
தன்னைப் போல் மற்றொரு டிரைவர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இதை சொல்வதாகவும் ராஜூ கூறி இருந்தார். இது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி அறிந்த நடிகை முமைத் கான், ஐதராபாத்தின் மேற்கு பகுதியில் உள்ள புஞ்சகட்டா போலீஸ் ஸ்டேஷனில், அந்த கார் டிரைவர் மீது நேற்றுமுன் தினம் புகார் கொடுத்தார்.
மறுத்தார் முமைத்கான்
அதில் டிரைவர் ராகவா ராஜூ கூறிய புகாரை மறுத்த நடிகை முமைத் கான், அவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து பணத்தையும் செலுத்தி விட்டதாகவும் இருந்தும் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜூ கூறியுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளார்.
முமைத்கான் விளக்கம்
இந்நிலையில் என்ன நடந்தது என்பது நடிகை முமைத்கான் விளக்கமாக தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் இருந்து கோவா செல்ல அவர் ரூ.20 ஆயிரம் கேட்டார். சாப்பாடு, தங்குவது, டிராவல் பெர்மிட் ஆகியவற்றுக்கும் சேர்த்து ரூ.22 ஆயிரம் தருவதாகச் சொன்னேன். சம்மதித்தார்.
முறையான பர்மிட்
நான், என் நண்பர் ஜாவேத்தும் அவர் காரில் சென்ற பிறகுதான் தெரிந்தது, அவரிடம் முறையான பர்மிட் இல்லாதது. இதனால் கர்நாடக பார்டரில் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. அவர் நடவடிக்கைகள் அச்சுறுத்துவதாகவே இருந்தது. கோவாவில் ஒரு நாள் அதிகமாக தங்க வேண்டி இருந்தது.
லக்கேஜை தரமாட்டேன்
அதற்கு ஆயிரம் ரூபாய் அதிகமாக தர ஒப்புக்கொண்டேன். ஐதராபாத் திரும்பியதும் மேலும் 8 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றார். இல்லை என்றால் எங்கள் லக்கேஜ்களை தரமாட்டேன் என்று மிரட்டினார். இதுபற்றி புகார் கொடுத்துள்ளேன். காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
Recommended Video
வேட்டையாடு விளையாடு
நடிகை முமைத்கான், தமிழில், கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், நெருப்பே, சிக்கி முக்கி நெருப்பே, விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள், கந்தசாமி படத்தில், என் பேரு மீனாகுமாரி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். மம்பட்டியான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.