மோகினி - 2 எடுத்தால் நான்தான் ஹீரோயின்.. அடித்து சொல்லும் நடிகை!
மோகினி இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நான் தான் கதாநாயகி என நடிகை திரிஷா கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: மோகினி இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நான் தான் கதாநாயகி என நடிகை திரிஷா கூறியுள்ளார்.
மாதேஷ் டைரக்டு செய்துள்ள 'மோகினி' படத்தில், கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். திகில் படமான மோகினி இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் திரிஷா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஜாக்கி பாக்மனி, பூர்ணிமா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மோகினி - 2?
இந்நிலையில் மோகினி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது பற்றி உதவியாளர்களுடன் டைரக்டர் மாதேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நான்தான் ஹீரோயின்
அவர் திட்டமிட்டபடி, ‘மோகினி-2' படத்தை எடுத்தால், நிச்சயமாக நான் தான் அந்த படத்திலும் கதாநாயகியாக நடிப்பேன் என திரிஷா தெரிவித்துள்ளார்.

பயப்பட மாட்டேன்
மேலும் தனக்கு பேய் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், பேயுடன் எந்த அனுபவமும் இல்லை. பேயை பார்த்தால் பயந்து ஓட மாட்டேன் என தில்லாக கூறியிருக்கிறார் திரிஷா.

அனுஷ்கா மாதிரி
அதுமட்டுமின்றி சரித்திர கால நாயகியாக நடிக்கவும் ஆசைப்படுகிறார் திரிஷா. ‘பாகுபலி' அனுஷ்கா மாதிரி, ஒரு வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது இவருடைய நீண்ட கால ஆசை என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











