Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவேன் - சிம்பு
சென்னை: "எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து எனது ரசிகர்களுக்கு பெருமை சேர்ப்பேன்" என்று நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார்.
பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்பு முன்ஜாமீன் கோரிய மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் " எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், ஒருசிலர் என்னைக் கீழே தள்ளிவிட முயன்றாலும் எனது ரசிகர்கள் பெருமை கொள்ளும் விதமாக அவற்றில் இருந்து மீண்டு வருவேன்". என்று நடிகர் சிம்பு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
Admin: Wtv trouble comes his way & how much ever some one tries to put him down,he stands up to make his fans proud. #STR #AYMTrailer1Mviews
— STR (@iam_str) January 4, 2016
மேலும் கடந்த புத்தாண்டில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஜனவரி 1 ம் தேதி வெளியான அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் இதுவரை 10 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும் சுமார் 2௦,௦௦௦க்கும் அதிகமான பேர் இந்த டிரெய்லரை லைக் செய்திருக்கின்றனர்.
இதனால் 2016 ல் 10 லட்சம் பார்வைகளைக் கடந்த முதல் டிரெய்லர் என்ற பெருமையை அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் பெற்றிருக்கிறது.
Admin:Thanks 4 d Phenomenal response. Time to celebrate #2016First1MViewWith20KLikeAYMtrailer https://t.co/WH2ku6A90O #AYMTrailer1Mviews
— STR (@iam_str) January 4, 2016
சிம்புவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிம்பு, அனிருத் மீது மேலும் ஒரு வழக்கு தூத்துக்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீப் பாடல் வழக்கில் சிம்புவிற்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதற்கான விடை இன்னும் சில மணித்துளிகளில் தெரிந்து விடும்!