Don't Miss!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
செல்லாது செல்லாது.. சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் நான்தான்.. மனோபாலா இல்லை.. ரவிவர்மா தகவல்!
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக நடிகர் மனோபாலா தேர்வானது செல்லாது என ரவிவர்மா தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் சங்கத்தில், 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
அதன் தலைவராக இருப்பவர், ரவிவர்மா. துணைத் தலைவராக மனோபாலா இருக்கிறார்.
அவங்க இல்லாட்டி இந்த பிக்பாஸ் சீசன் செம ட்ரை ஆயிடும்.. அறந்தாங்கி நிஷாவின் அட்ராசிட்டிஸ்!
கருத்து வேறுபாடு
ரவி வர்மாவுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் மீது அதிருப்தியாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி அவரை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டு புதிய தலைவராக மனோபாலாவை தேர்வு செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆதாரமற்ற புகார்
இதைக் கண்டித்து ரவிவர்மாவும் அவரது ஆதரவாளர்களும் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சின்னத்திரை நடிகர் சங்கம் நேர்மையாக செயல்பட்டு வருகிறது. எந்த முறைகேடும் நடக்கவில்லை. சங்கத்தின் தலைவர் ரவிவர்மா மீது மனோபாலா, ரிஷி ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர்.
நிவாரண பொருட்கள்
ரவிவர்மாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக அவர்கள் கையெழுத்து வாங்கிய சில உறுப்பினர்கள், சங்கத்தில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள். ரவிவர்மாவை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பேரவைக்குத்தான் இருக்கிறது. கொரோனா நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்பட்டன.
தொடர்ந்து செயல்படுவார்
சங்கத்தின் விதிகளின்படி ரவிவர்மா சங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து செயல்படுவார். சங்க விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். பொதுச்செயலாளர் ரிஷி கேசவன் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் சங்க விதிகளுக்கு எதிரானவை. அவை செல்லாது. மனோபாலாவை தலைவராக தேர்வு செய்ததது தவறு. இவ்வாறு கூறினர்.