Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செல்லாது செல்லாது.. சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் நான்தான்.. மனோபாலா இல்லை.. ரவிவர்மா தகவல்!
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக நடிகர் மனோபாலா தேர்வானது செல்லாது என ரவிவர்மா தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் சங்கத்தில், 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
அதன் தலைவராக இருப்பவர், ரவிவர்மா. துணைத் தலைவராக மனோபாலா இருக்கிறார்.
அவங்க இல்லாட்டி இந்த பிக்பாஸ் சீசன் செம ட்ரை ஆயிடும்.. அறந்தாங்கி நிஷாவின் அட்ராசிட்டிஸ்!
கருத்து வேறுபாடு
ரவி வர்மாவுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் மீது அதிருப்தியாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி அவரை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டு புதிய தலைவராக மனோபாலாவை தேர்வு செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆதாரமற்ற புகார்
இதைக் கண்டித்து ரவிவர்மாவும் அவரது ஆதரவாளர்களும் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சின்னத்திரை நடிகர் சங்கம் நேர்மையாக செயல்பட்டு வருகிறது. எந்த முறைகேடும் நடக்கவில்லை. சங்கத்தின் தலைவர் ரவிவர்மா மீது மனோபாலா, ரிஷி ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர்.
நிவாரண பொருட்கள்
ரவிவர்மாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக அவர்கள் கையெழுத்து வாங்கிய சில உறுப்பினர்கள், சங்கத்தில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள். ரவிவர்மாவை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பேரவைக்குத்தான் இருக்கிறது. கொரோனா நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்பட்டன.
தொடர்ந்து செயல்படுவார்
சங்கத்தின் விதிகளின்படி ரவிவர்மா சங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து செயல்படுவார். சங்க விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். பொதுச்செயலாளர் ரிஷி கேசவன் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் சங்க விதிகளுக்கு எதிரானவை. அவை செல்லாது. மனோபாலாவை தலைவராக தேர்வு செய்ததது தவறு. இவ்வாறு கூறினர்.