Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செக்ஸுக்கு அழைத்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பெயரை சொல்லிடுவேன்- கிலி கிளப்பும் தாரா!
ஆந்திராவின் இரு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பி வற்புறுத்தினர். அவர்கள்தான் என்னை தந்திரமாக சிக்க வைத்துவிட்டனர். அவர்கள் பெயர், விபரங்களை வெளியிடுவேன் என்று தாரா கூறியுள்ளார்.
சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக பிரபல நடிகை தாரா சவுத்ரியை போலீசார் சமீபத்தில் திடீரென கைது செய்தனர்.
பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் ஒரு இளம் பெண் அளித்த புகாரின் பேரில் தாரா சவுத்ரி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாரா சவுத்ரியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது ஆந்திரா, கர்நாடகாவில் ஏராளமான பெண்களை விபசாரத்தில் தள்ளியிருப்பது தெரிய வந்தது. சினிமா ஆசையில் வரும் பெண்களை மயக்கி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொழில் அதிபர்களுக்கு விருந்தாக்கியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
போலீஸ் எஸ்பி உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளுடனும் தொடர்பு வைத்து பெண்களை சப்ளை செய்துள்ளார் தாரா. கோவில்களுக்கு செல்லும்போது வி.ஐ.பி. தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கோவில் நிர்வாகிகளிடம் உயர் போலீஸ் அதிகாரிகளே தாராவுக்காக பரிந்துரை செய்வது உண்டாம். இதை ஏற்க மறுத்த கோவில் நிர்வாக அதிகாரிகள் பலரை தாரா சவுத்ரி நிர்ப்பந்தத்தால் இடமாற்றம் செய்துள்ள தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
தாரா சவுத்ரி மீது மேலும் பல பெண்கள் நேரில் வந்து புகார் அளித்த வண்ணம் உள்ளதாகவும் அவரை போலீஸ் காவலில் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
ஒரு நேரத்தில் தனக்கு அனைத்து வகையிலும் உற்ற துணையாக இருந்த போலீஸ், இப்போது அப்படியே யு டர்ன் அடித்து நிற்பது தாராவை அதிர வைத்துள்ளது.
தன்னை சிக்க வைத்தவர்களின் பெயர்களை அம்பலப்படுத்தவும் அவர் தயாராகிவிட்டார்.
தன்னை கைது செய்தது குறித்து தாரா சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், "இந்த விபச்சார வழக்கில் என்னை சதி செய்து சிக்க வைத்து விட்டனர். நிறைய பேர் ஜாதகம் என் கைவசம் உள்ளது. அவர்களை ஒரு கை பார்ப்பேன். நான் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் பலரது ரகசியங்களை வெளியிடுவேன்.
இரண்டு எம்.பி.க்கள் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள அழைத்தனர். நான் சம்மதிக்கவில்லை. சில எம்.எல்.ஏ.க்களும் என்னை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினார்கள். அவர்கள் பெயர்களை வெளியிடுவேன்.
என்மேல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும் வெளியிடுவேன். என் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பேன். ஆந்திர போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துவேன்," என்றார்.