Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'ஓட மாட்டேன், குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பேன்' - நடிகை அல்போன்சா
நடிகை அல்போன்சாவின் காதலரும், 'கவசம்' படத்தின் கதாநாயகனுமான வினோத் குமார் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி அல்போன்சாவின் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தங்கள் மகனின் மரணத்திற்கு நடிகை அல்போன்சாதான் காரணம் என்று வினோத்குமாரின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இதுதொடர்பாக நடிகை அல்போன்சா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "என் காதலர் வினோத்குமாரை நான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தேன். அதற்காக முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தேன். அதற்குள் வினோத்குமார் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மரணத்திற்கு நான்தான் காரணம் என்று வினோத் குமாரின் பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்கள். இதை நான் சட்டப்படி சந்திப்பேன்.
'கவசம்' படம் முடிவடைந்து 3 வருடங்கள் ஆகியும் திரைக்கு வரவில்லையே என்று வினோத் குமார் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார். இந்த நிலையில், அவருடைய தாயார் அவருக்கு அடிக்கடி போன் செய்து கவசம் படம் எப்போது திரைக்கு வரும்? என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.
மீண்டும் நடிப்பேன்
ஏற்கனவே கவலைப்பட்டு கொண்டு இருந்த வினோத்குமாருக்கு இது மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறேன். மீண்டும் படங்களில் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்," என்றார்.