Don't Miss!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
''கவுத்திட்டியே ராசா''..... 'உச்' கொட்டும் கார்த்திகா!
சென்னை: அன்னக்கொடியை ரொம்ப எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்று நடிகை கார்த்திகா நாயர் கூறியுள்ளார்.
ராதா மகள் கார்த்திகாவை நாயகியாகப் போட்டு பாரதிராஜா எடுத்த படம்தான் அன்னக்கொடி.
படம் எங்கேயோ போகப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அது வேறு எங்கேயோ போய் விட்டது. இதனால் கார்த்திகா அப்செட்டாகியுள்ளார்.
கோ... ஸ்டாப்
கோ மூலம் தமிழுக்கு நடிக்க வந்தவர் கார்த்திகா. கோ, அவருக்கு பெரிய பிரேக்காக அமைந்தது. ராசியான நடிகையாக பார்க்கப்பட்டார். ஆனால் அன்னக்கொடி அதை ஸ்டாப் செய்து விட்டது.
அம்மா செஞ்ச சிபாரிசு
இந்த நிலையில்தான் அன்னக்கொடி படத்தி்ல் என் குலக் கொடி கார்த்திகாவை நடிக்க வைக்க வேண்டும் என்று பாரதிராஜாவிடம் சிபாரிசு செய்து சான்ஸ் வாங்கிக் கொடுத்தார் அம்மா ராதா.
ஆடெல்லாம் மேய்த்து என்ன புண்ணியம்...
படு மாடர்ன் பேக்கிரவுண்டில் வளர்ந்தவர் கார்த்திகா. ஆனால் அன்னக்கொடியி்ல் அவர் ஆடெல்லாம் மேய்த்துக் கஷ்டப்பட்டார்.
பெரும் ஏமாற்றம்
ஆனால் அன்னக்கொடி படம் பெரும் தோல்வியைத் தழுவியதால் கார்த்திகா கடும் கவலையில் இருக்கிறார்.
கிளாமர் கூட காலை வாரவில்லை
இதற்கு முன்பு கிளாமராகக் கூட நடித்திருக்கிறேன். அது கூட காலை வாரவில்லை. ஆனால் அன்னக்கொடி ஏமாற்றி விட்டது.
நான் ஆடு மேய்த்ததை ரசிக்கவி்ல்லை
நான் கிராமத்து வேடத்தில் நடித்ததை ரசிகர்கள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.
ஸாரி.. இனிமே நோ ஆடு...
இனிமேல் இப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்க மாட்டேன். அது எனக்குப் பொருத்தமாக இல்லை என்றார் கார்த்திகா.