Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'சினிமா பற்றி அதிகம் தெரியாது... கத்துக்குறேன் தலைவரே...' உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்!
தனது படங்களில் வழிவிக்க ஒரு கருத்தை திணிக்க மாட்டேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தனக்கு சினிமா பற்றி அதிகம் தெரியாது என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ, ஷிரின், விக்னேஷ்காந்த் நடிப்பில் வெளியான படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இந்த படம் கடந்த 14ந்தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், தனது படங்களில் வழிவிக்க ஒரு கருத்தை திணிக்க மாட்டேன் எனக் கூறினார்.
மீண்டும் பிரச்சினையில் சிக்கிய சிவா பட தலைப்பு... எம்ஜிஆர் ரசிகர்கள் கருணை காட்டுவார்களா!
பயம் இல்லை
இதுகுறித்து அவர் பேசியதாவது, "இந்த டீமை பார்த்து பயம் இருந்ததாக எல்லோரும் சொன்னார்கள். எனக்கு பயத்தை விட நம்பிக்கை அதிகமாக இருந்தது. நம்பிக்கை இல்லாவிட்டால் படத்தை தயாரித்திருக்க மாட்டேன்.
க்ளைமாக்ஸ் தான் பிடித்தது
ஸ்கிரிப்ட் படித்த பிறகு அதிகமாக நையாண்டி செய்ய வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொண்டேன். படத்தின் கிளைமாக்ஸ் தான் என்னை தயாரிக்க சம்மதிக்க வைத்தது. நான் தயாரிக்கும் படம் மூலம் அனைவரும் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் என் நோக்கம். அது இந்த படம் மூலம் நடந்து இருக்கிறது.
கத்துக்குறேன் தலைவரே
யூடியூப் டீமை வைத்து படம் என்றதும் நிறைய பேர் சந்தேகம் எழுப்பினார்கள். அப்போதுதான் நான் இதை தயாரித்தே ஆகவேண்டும் என்று உறுதி ஆனேன். எனக்கு சினிமா பற்றி அதிகம் தெரியாது. ஆனால் பிறர் தரும் அனுபவம் மூலம் கற்றுக்கொள்கிறேன்.
நல்ல கருத்து
நான் தயாரித்த 2 படங்களிலுமே நல்ல கருத்து இருந்தது. ஒவ்வொரு படத்திலும் கருத்து இருக்க முயற்சி செய்வோம். ஆனால் கருத்தை திணிக்க மாட்டோம்", என அவர் கூறினார்.