Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் !
இனி கவின் - லாஸ்லியா விவகாரத்தில் தலையிட மாட்டேன் என சேரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கவின், லாஸ்லியா பெயரையே இனி நான் சொல்ல மாட்டேன் என காட்டமாகத் தெரிவித்துள்ளார் சேரன்.
பிக் பாஸ் சீசன் 3 நல்ல ஒரு சினிமாவைப் போல் கலவையான காட்சிகளோடு நடந்து முடிந்திருக்கிறது. கவின், லாஸ்லியா காதல், சேரன் - லாஸ்லியாவை வைத்து அப்பா-மகள் பாசம் என பிக் பாஸ் வீடு இம்முறை பாசத்திற்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருந்தது.
கவின் - லாஸ்லியா காதலுக்கு சேரன்தான் எதிராக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஆரம்பத்தில் இருந்தே கவிலியா ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. தற்போது நிகழ்ச்சி முடிவடைந்து விட்ட நிலையிலும் தொடர்ந்து அதே குற்றச்சாட்டை அவர்கள் சமூகவலைதளங்களில் கூறி வருகின்றனர்.
ப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்!
|
சேரன் கோபம்
தொடர்ந்து தன் மீது கூறப்பட்டு வரும் புகார்களால் கோபமடைந்த இயக்குநர் சேரன், இதுதொடர்பாக கோபமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "உங்களுக்கு பிடித்தவர்களை பிபி வீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புண்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன். அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்", என கூறியுள்ளார்.
|
கவின் விவகாரம்
மேலும், "தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சினை தீராது. இதை வளர்த்து நான் பெரியாளாக விரும்பவில்லை. நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.இருந்தும் பிரச்னை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன்", என்றும் சேரன் குறிப்பிட்டுள்ளார்.
|
இது தான் நல்லது
இதே போல் மற்றொரு பதிவில், "கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்சினைக்கு வரவேண்டாம்", என்றும் சேரன் தெரிவித்துள்ளார்.
|
வருத்தம்
மற்றொரு பதிவில் அவர், "நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி", என சேரன் கோபப்பட்டுள்ளார்.
|
ரசிகர்கள் அதிர்ச்சி
சேரனின் இந்த டிவீட்டுகளை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். "இவர்களுக்கு பதில் சொல்லி உங்க நேரத்தை ஏன் வீண் செய்கிறீர்கள், இன்னும் இரண்டு வருடத்தில் கவின், லாஸ்லியா என்ற இரண்டு பெயர்களையும் இவர்களே மறந்து விடுவார்கள்... உங்களின் அடுத்த படைப்பை காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், நீங்கள் அதில் கவனம் செலுத்துங்கள்", அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!